பக்கம் எண் :

காட்சி - 437

  ராசன் அறியக் கூடாது ! சற்றும் எதிர்பாராத நிலையில் அவனைத்
  தாக்கவேண்டும். எதிர்த்து நிற்கும் ஆற்றலற்று (ஏளனமாக) சோழச்
  சக்கரவர்த்திகள் என் திருவடியைத் தொழவேண்டும்.

குருகுலத்தரையர் : சோழ ஒற்றரைப் பற்றிய கவலையை விடுங்கள்.
  அவர்களைக் கண்காணிக்க ஆவன செய்கிறேன்.

சு. பாண்டியர் ; என் கனவு நிறைவேறும் நாள் நெருங்கி விட்டது.
  ஹஹ் ஹஹ் ஹா!
        (பாண்டியன் உரக்கச் சிரிக்கிறான்)

                         
-திரை-

                      
 காட்சி - 5

இடம் : அன்னம் இல்லம்

நேரம் : பிற்பகல்

தோன்றுவோர் : அன்னம், தனபதி, அம்பலம்

   [இல்லத்தின் கூடத்தில் உள்ள ஊசலில் அன்னம் அமர்ந்து மெல்ல
   உந்தியவாறு பாடுகிறாள்.]


அன்னம் : வடுவஞ்சி வாய்மொழிந்து
         தமவும் பிறவும் ஒப்ப நாடிக்
         கொள்வதூஉம் மிகை கொளாது
         கொடுப்பதூஉம் குறை கொடாது
         பல்பண்டம் பகர்ந்து வீசும்
         தொல் கொண்டித் துவன்றிருக்கை

            [தனபதி உள்ளே வருகிறார்.]