பக்கம் எண் :

40வளவன் பரிசு

தனபதி : அறம் வேண்டாம் என்று சொல்லவில்லை. அன்னம், பொருளை
  அதிக விலைக்கு விற்காமை அன்றைய அறம். இன்று அதிக விலைக்கு
  விற்பது மறமன்று; அது வணிகரின் திறம். யாரங்கே நிற்பது?

    [அம்பலம் கையில் ஓர் ஏட்டுச் சுவடியோடு வாசல் வழியே எட்டிப்
    பார்க்கிறாள்.]

அம்பலம் : நான் தானுங்க; அம்பலம்.

தனபதி : உள்ளே வருவதுதானே! ஏன் வாசலில் தயங்கி நின்றாய்?

அம்பலம் : ஒன்றுமில்லைங்க.

தனபதி : கையிலே என்ன?

அம்பலம் : ஒன்றுமில்லைங்க.

தனபதி : எது கேட்டாலும் ஒன்றுமில்லைதானா? ஏதோ சுவடி
  போலிருக்கிறதே.

அம்பலம் : ஆமாங்க.

தனபதி : கொண்டுவா, இங்கே....

    [அம்பலம் தனபதியிடம் சுவடியைத் தருகிறாள். தனபதி அதில் 
    எழுதியிருப்பதைப் படிக்கிறார்.]

தனபதி : பெரும்பாணாற்றுப்படை, அம்பலம் நீயும், தமிழிலக்கியம் படிக்கத் 
  தொடங்கிவிட்டாயா?

அம்பலம் : எனக்கில்லைங்க.

தனபதி : பின் யாருக்கு?

அன்னம் : எனக்குத்தான்! நான்தான் இதை எதிர் வீட்டுப் புலவரிடமிருந்து
  பெற்றுவரச் சொன்னேன்.