தனபதி :
பத்து நாள் பொறுத்துக்கொள்! தாமரைக்கண்ணன் என்னை
இந்திரன் - சந்திரன்
என்று பாராட்டிப் பாடிய பாட்டை உன்னிடம்
காட்டுகிறேன். அம்பலம்!
அம்பலம் :
ஐயா!
தனபதி :
தாமரைக்கண்ணன் எங்கே இருக்கிறான் என்று தெரியுமா?
அம்பலம் :
தெரியும் ஐயா!
தனபதி :
அவனை நான் பார்க்க விரும்புவதாகச் சொல் கடைக்கு வந்து
காணும்படி கூறு.
அம்பலம் :
சொன்னபடி செய்கிறேனுங்க.
[அம்பலம் வெளியேற, அன்னம் கோபத்தோடு உள்ளறை நோக்கிச்
செல்கிறாள்.]
-திரை-
காட்சி - 6
இடம் :
சோழன் அரண்மனை
நேரம் :
இரவு
தோன்றுவோர் :
புவனமுழுதுடையாள், இராசராசர், இராசேந்திரன்.
[புவனமுழுதுடையாள் தனதறையில் காத்துக் கொண்டிருக்கிறாள்.
அறையின் நான்கு மூலைகளிலும்
பாவை விளக்குகள் எரிந்து |