இராசராசர் :
இல்லை தேவி! எனக்குத் துணையாக என் மகன்
இராசேந்திரன் வருகிறான்.
புவன :
இராசேந்திரனா !
இராசேந்திரன் :
ஆமாம் தாயே! நான்தான் உடன் செல்லப் போகிறேன்.
அமைச்சரைக் காட்டிலும்
நான் இளையவன்; வலியவன், தந்தையாரின்
நிழலாகத் தொடர்ந்து அவர்க்கு எந்தத் துன்பமும்
வராமல் காப்பேன்.
புவன :
இளமையும் வலிமையும் போதா மகனே! தெளிவும்
திறமும்வேண்டும்! அறிவும் அனுபவமும் வேண்டும்!
இராசராசர் :
இராசேந்திரன் நம் புதல்வன்! என் ஆற்றலையும் உன்
அறிவையும் ஒருசேரப் பெற்றள்ளான்.
அனுபவம் போதாதுதான்! அதை
அவன்பெற வேண்டும் என்பதற்காகவே என்னுடன் அழைத்துச்
செல்லுகிறேன்.
புவன :
எப்போது புறப்படுகிறீர்கள்!
இராசராசர் :
நாளை காலை விடிவதற்கு முன், எங்கள் பயணம்
தொடங்கும். பத்து நாளில் திரும்பி
விடுவோம். தேவி, அரசியலை விட்டு
அறுசுவை பற்றிப் பேசுவோமா?
புவன :
வாருங்கள், உண்ணச் செல்வோம்.
[புவனமுழுதுடையாள் முன்னே செல்ல இராசராசரும் இராசேந்திரனும்
பின் தொடருகின்றனர்.]
-திரை- |