காட்சி - 7
இடம் :
உறையூர் வீதியில் தனபதியின் கடை.
நேரம் ;
காலை.
தோன்றுவோர் :
தனபதி, தாமரைக்கண்ணன், அம்பலம்.
[கடையில் தனபதி அமர்ந்திருக்கிறார். அம்பலம் கடையின் மற்றொரு
பகுதியில் கீழே உட்கார்ந்திருக்கிறான்.
தாமரைக்கண்ணன் கடைக்குள்
வருகிறான்.]
தாமரைக்கண்ணன் :
வணக்கம் வணிகரே!
தனபதி :
(நிமிர்ந்து பார்த்து) வணக்கம். தம்பிக்கு என்னவேண்டும்?
மரகதமா, மாணிக்கமா.....
தா. கண்ணன் :
எனக்கு வேண்டியதொன்று உம்மிடம் உண்டு. அதைக்
கேட்பதற்குப் பிறிதொரு
முறை வருவேன். நீங்கள் என்னை அழைத்ததாக
அறிந்து இப்போது வந்துள்ளேன்.
அம்பலம் :
ஐயா, இவர்தானுங்க சின்னம்மா சொன்ன தாமரைக்கண்ணன்.
தனபதி :
ஓ! புலவரா! உட்கார் தம்பி.
[தாமரைக்கண்ணன் தனபதியின் அருகே அமர்கிறான்.]
தனபதி :
தம்பி, பெரிய புலவர் என்று கேள்விப்பட்டேன்.
தா. கண்ணன் :
நான் ஆண்டிலே இளம்புலவன்! ஆற்றலிலே பெரும்
புலவன்! சிந்தைக்கு விருந்தாகும் செந் |