பக்கம் எண் :

காட்சி - 749

  தமிழ்க் கவிகள் பல இயற்றிப் புகழ் கொண்டவன். இந்நகரத்தில் உள்ள
  கற்றோர் என்னை அறிவார்கள்.

தனபதி : என்ன தம்பி உன்னை நீயே புகழ்ந்து கொள்கிறாய்?

தா. கண்ணன் : தன்னுடைய ஆற்றல் உணராரிடையில் தான் தற்புகழ்தல்
   தகும் புலவோற்கே என்று சான்றோர் கூறுவர்.

அம்பலம் : உங்க புகழை எங்க ஐயாவுக்கு சின்னம்மா அன்னம் நல்லபடி
   எடுத்துச் சொன்னாங்க.

தனபதி : அம்பலம், குறுக்கே பேசாதே.

அம்பலம் : சரிங்க.

தனபதி : தம்பி, எனக்குப் புலவர்களைப் பற்றித் தெரியும். எத்தனையோ
  புலவர்கள் என் கடைக்கு வந்திருக்கிறார்கள். என்னைப் புகழ்ந்து பல
  பாடல்கள் பாடியிருக்கிறார்கள். நானும் அவர்களுக்குப் பொருளுதவி
  செய்திருக்கிறேன். இல்லையா அம்பலம்?

                [அம்பலம் பேசாமல் இருக்கிறான்.]

தனபதி : என்னடா அம்பலம், மௌனமாக இருக்கிறாய். நான் கேட்டதற்குப்
  பதில் சொல்ல வேண்டாமா?

அம்பலம் : (சிறிது வருத்தத்துடன்) குறுக்கப் பேசாதே என்று என்னை
  அடக்கிட்டீங்களே.

தனபதி : ஓ! அதனால் பேசவில்லையா! சரி விடு! (தாமரைக் கண்ணனிடம்)
  தம்பி, புலவர்களுக்கு உதவி செய்வதில் எனக்கு எப்போதுமே
  ஆசையுண்டு.