பக்கம் எண் :

56வளவன் பரிசு

  சிறப்பைப் பார்த்து, சேவகர்கள் அவனை வணங்கிய பணிவைப் பார்த்து,
  இளவரசனோ என ஐயந்தோன்றுகிறது. யோசித்துப் பார்! தமிழகத்தில்
  அசரர்களுக்குச் சமமான செல்வமும் செல்வாக்கும் பெற்றவர், வேறு
  யாருமில்லை?


இராசேந்திரன் : வணிகர் பொருள் வளத்தில் வேந்தர்க்கு நிகரானவர்கள்.
  அரசர்க்கு அடுத்த நிலையில் சிறப்பும் மதிப்பும் பெற்றவர்கள்.

 
இராசராசர் ; இன்னும் யோசித்துப்பார். தேரிலே சென்றவனை நேரிலே

    பார்த்தாயே. அவன் முகத்தை மீண்டும் நினைவுபடுத்திக்கொண்டு சொல்.
 
இராசேந்திரன் : கண்டுபிடித்து விட்டேன், தந்தையே வணிகர்களைக்
  காட்டிலும் செல்வத்திலும் மதிப்பிலும் சிறந்தவர்கள் செந்தமிழ்ப்
  புலவர்கள். அரசர்கள் வாரி வழங்கும் பெருங் கொடையால் அப்
  புலவர்களும் புரவலர்களைப் போலப் புரவியும் களிறும் ஊர்வர்; தேரும்
  பல்லக்கும் ஏறுவர். அவர்களுக்கு அரண்மனைச் சேவகர்கள் என்ன,
  அரசர்களே வணக்கம் செலுத்துவார்கள்.


இராசராசர் : புலவர்கள் வாழ்வில் வறுமையும் வளமையும் சாதாரண
  நிகழ்ச்சிகள். ஆனால், வேந்தர்கள் தரும் வியத்தகு பரிசுகள்சில புலவர்
  குடும்பங்களைப் பல தலைமுறைகளுக்குச் செல்வச் செழிப்பிலே நிலைக்கச்
  செய்துவிடுகின்றன.

இராசேந்திரன் : தேரிலே சென்றவன் புலவர் புதல்வனா?
 
இராசராசர் : பெரும்புலவர் ஒருவரின் அரும் புதல்வன். மாபெரும்
புலவரின் மரபிலே வந்தவன்;