இவனும் ஓர் இணையற்ற புலவனே! இந்த அரண்மனைக்குள் செல்ல
உனக்கும் எனக்கும் உள்ள உரிமை
இந்த இளம் புலவனுக்கும் உண்டு.
இராசேத்திரன் ;
விளங்கச் சொல்லுங்கள்.
இராசராசர் :
இந்த அரண்மனை சோழ அரசர்க்குச் சொந்தமானது.
ஆனால் இதற்குள் உள்ள ஓர்
ஒப்புயர்வற்ற கட்டடம் இப்போது
வளவனுக்கு உரியதன்று; இந்தப் புலவனுக்கு உரியது. நீ காண
வேண்டிய
கட்டடம் ஒன்று இங்கே உண்டு என்று சொன்னேனே, அது இப்போது
சென்ற
புலவனுக்குரியது. புலவர்க்குரிய புகழ் வாய்ந்த கட்டடத்தைக்
காண்போம். வா, உள்ளே செல்வோம்.
[இருவரும் வாயிலைக் கடந்து உள்ளே செல்கின்றனர்.]
-திரை-
காட்சி - 9
இடம் ;
பதினாறுகால் மண்டபம்.
நேரம் :
விடியற்காலை.
தோன்றுவோர் :
இராசராசர், இராசேந்திரன், தாமரைக் கண்ணன்.
[சிற்பச் சிறப்புமிக்க பதினாறுகால் மண்டபத்தின் நடுவே அமைந்த
மேடையில் அமர்ந்து
பாடுகிறான், தாமரைக்கண்ணன். உழவர்
வேடத்தில் அரசரும் இளவரசனும், மண்டபத்தின் படியிலே
நின்று
கவனிக்கின்றனர்.] |