பக்கம் எண் :

58வளவன் பரிசு

தாமரைக்கண்ணன் : (பாடுகிறான்)

      மலை யகழ்க்குவனே, கடல்தூர்க்குவனே!
      வான் வீழ்க்குவனே, வளிமாற்றுவன்.....

இராசேந்திரன் : (மெல்லிய குரலில்) தந்தையே, என்னுடல் புல்லரிக்கிறது.
  இமயத்தே புலிபொறித்த கரிகால், வளவனின் சிறப்பையல்லவா பாடுகிறான்!
  திருமாவளவனின் சிறப்பையல்லவா பாடுகிறான்! திருமாவளவளின்

  அருமையும் பெருமையும் கேட்கக் கேட்க இனிக்கிறது. நம் முன்னோன்
  புகழல்லவா இது!

இராசராசர் : மகனே, வேடத்தை மறந்து வெளிப்படையாகப் பேசாதே.
  புலவன் பாடுவதன் நோக்கம் அவன் முன்னோன் புகழை
  வெளிப்படுத்துவதுதான்!

இராசேந்திரன் : அவன் முன்னோன் புகழா?

இராசராசர் : ஆமாம். சற்று நேரத்தில் அவன் பாட்டு முடிந்துவிடும். பிறகு
  அவனை அணுகிப் பேசுவோம்.

தா. கண்ணன் : (பாடுகிறான்)

        அரிமா வன்ன அணங்குடைத் துப்பின்
        திருமா வளவன் தெவ்வர்க் கோக்கிய
        வேலினும் வெய்ய கானம்; அவன்
        கோலினும் தண்ணிய தடமென்றோளே!

      [பாடி முடிந்ததும் இருகைகூப்பி வணங்கிய பின் தாமரைக் கண்ணன்
       எழுகிறான். உடனே அரசர் இளவரசனுடன் அவனை அணுகுகிறார்.]

இராசராசர்
இராசேந்திரன்  வணக்கம்.