தா. கண்ணன் :
வணக்கம். நீங்கள்......
இராசராசர் :
நீங்கள் சற்றுமுன் பாடினீர்களே, அந்தப் பாட்டிலே
புகழப்பட்ட வான்
பொய்ப்பினும் தான் பொய்யாத வளமார் காவிரி பாயும்
சோழ வளநாட்டு உழவர்கள். ஊர்,
முடிகொண்ட சோழபுரம். இவன் என்
மகன்.
தா. கண்ணன் :
உழவர்கள்! முடிகொண்ட சோழபுரம், அப்படியா?
இராசேந்திரன் :
ஆமாம்! தாங்கள் யார் என அறியலாமா?
தா. கண்ணன் :
நண்பா, என்னையொத்த வயதுடைய நீ என்னைத்
தாங்கள், நீங்கள் என்று உயர்த்திப்
பேச வேண்டாம். என்னை உன்
நண்பனாகக் கருதிப் பேசு!
இராசேந்திரன் :
சரி. நீ யார் என்பதை அறியலாமா?
தா. கண்ணன் :
என் பெயர் தாமரைக்கண்ணன். என் தந்தையார் பெயர்
பாண்டரங்கண்ணன்;
என் பாட்டனார் பெயர் பதுமக்கண்ணன்.
இராசேந்திரன் :
கண்ணன் பரம்பரையோ?
தா. கண்ணன் :
ஆம் நண்பா! நாங்கள் கண்ணன் பரம்பரையினர்.
தண்டமிழுக்கு மன்னன் எனத்
தகும் உருத்திரங்கண்ணன் பரம்பரை
பைந்தமிழில்.....
இராசேந்திரன் :
பட்டினப்பாலை என்னும் நூலையளித்த கடியலூர்
உருத்திரங்கண்ணன் பரம்பரை;
இல்லையா?
தா. கண்ணன் :
ஆமாம். இமயம் வென்ற கரிகாலன் இதோ, இந்த
மண்டபத்தில் கொலுவிருக்க,
நான் சற்றுமுன் அமர்ந்த அதே பீடத்தி
லமர்ந்து எங்கள் முன்னோரான உருத்திரங் கண்ணனார் |