பக்கம் எண் :

62வளவன் பரிசு

  கலம் செலுத்தி, வளியின் வலிமையை அடக்கித் தாம் வேண்டுவழிச்
  சென்ற சிறப்பு நோக்கியே, ‘நளியிரு முந்நீர் நாவா யோட்டி வளிதொழி
  லாண்ட உரவோன்’ என்று சோழ மன்னன் சிறப்பிக்கப்பட்டான்.
  அதனால் பட்டினப்பாலை பகர்ந்தமை யாவும் உயர்வு நவிற்சிகளல்ல;
  உயர்ந்த உண்மைகள்!

இராசேந்திரன் : தாமரைக்கண்ணா, கரிகாலன் புகழையும் அவருக்கு
  முன்னே வாழ்ந்த மன்னர் பெருமையையும் நன்றாக அறிந்துள்ளாய்.
  கரிகாலனுக்குப்பின்னே வந்த சோழ மன்னர்களின் ஆற்றலை அறிவாயா?

தா. கண்ணன் : அறிவேன், கரிகாலர்க்குப் பிறகு சோழர் குடியில் மாவீரர்
  பலர் தோன்றினர். (இராசராசரைப் பார்த்தவாறு) இராசராசரே...

     (தாமரைக் கண்ணன் சற்றே இழுத்து நிறுத்த அரசர் தம்மையறியாது
      பேசுகிறார்.]

இராசராசர் : என்ன..........?

      (அரசர் திடீரென்று சமாளித்துக் கொண்டு, மேலே பேசாது நிற்கிறார்.)

தா. கண்ணன் : தாங்கள் ஏதோ சொன்னீர்களே?

இராசராசர் ; ஒன்றுமில்லை, மேலே சொல்.

தா. கண்ணன் : சோழ மன்னர்களில் இராசராசரே என்னைக் கவர்ந்தவர்.
  அவர்தான் வீரத்திலும் வெற்றியிலும் கரிகாலுனுக்கு நிகரானவர் என்பது
  என் எண்ணம்.

  (தாமரைக்கண்ணன் பேசியபோது ‘இராசராசரே’ என்பதை மட்டும்
  அழுத்திச் சொல்கிறான்.)