பக்கம் எண் :

68வளவன் பரிசு

                          காட்சி - 10

இடம் : தாரைக்கண்ணனின் மாளிகை

நேரம் : பிற்பகல்

தோன்றுவோர் : தாமரைக்கண்ணன், அம்பலம்.

   [தாமரைக்கண்ணன் மாளிகை அரண்மனை போல அகன்று, உயர்ந்து பல
    மாடங்களோடு திகழ்கிறது. அம்பலம் அதன் முன்னே நிற்கிறான்.
    அவன் கையில் ஒரு சிறிய பை. அதில் பொற்காசுகள் இருப்பது,
    ‘கலகல’ ஓசையால் தெரிகிறது. தலையை உயர்த்தி மாளிகையைப்
    பார்த்து வியப்புறுகிறான்.]

அம்பலம் : அம்...மா...டி...! எத்தனை மாடி! எவ்வளவு பெரிய மாளிகை!
   இதைப் பார்த்தா கழுத்து வலிக்குது. உம்...வெளியே யாரும் காணோம்.
   வாயிற்கதவு திறந்திருக்கிறது... குரல் கொடுப்போம். புலவரே.....புலவர்
   தாமரைக்கண்ணரே..... புலவரே... அடடா..... தொண்டை வற்றிப்போய்
   விட்டதே.....புலவரே....

   [தாமரைக்கண்ணன் மாளிகைக்குள்ளிருந்து ஒரு குவளையுடன் வெளி
   வருகிறான்.]

அம்பலம் : வந்து விட்டீர்களா? குவளையுடன் வருகிறீர்களே...
   எங்கேயாவது போகிறீர்களா?

தாமரைக்கண்ணன் : இல்லை, அம்பலம்! உன் குரல் கேட்டது. வெளியே
   வர எழுந்தேன். அதற்குள்