பக்கம் எண் :

70வளவன் பரிசு

தா. கண்ணன் : அப்படியானால் யார் உன்னை அனுப்பியது?
 

அம்பலம் : வணிகர் தனபதி அனுப்பினாருங்க.

தா. கண்ணன் : என்னை மீண்டும் கடைக்கு வரச்சொல்கிறாரா?

அம்பலம் : இல்லைங்க. அதுக்குப் பதிலாத்தான் என்னை அனுப்பினார்.
  அவர்மீது நீங்க ஒரு பாட்டுப் பாடணும், பாடினால் இந்த முந்நூறு
  பொற்காசுகளை உங்களுக்குத் தரச் சொன்னார். பிடிங்க பொன்னை!
  தொடுங்க. பாட்டை!

      [அம்பலம் குவளையை அவனிடம் நீட்டுகிறான்.]

தா. கண்ணன் : என்ன இது, நான் உன்னிடம் கொடுத்த மோர்க்குவளையை
   என்னிடம் தருகிறாய்!

அம்பலம் : (குவளையைப் பார்த்து) ஆமாம். இது குவளை. முந்நூறு பொன்
   கொண்ட பையைக் கையிலே கொண்டு வந்தேனே! எங்கே போச்சு?
   எங்கய்யாவுக்கு என்ன பதில் சொல்வேன்?

   [தாமரைக்கண்ணன் புன்னகையோடு திண்ணையிலிருக்கும் பையைச்
   சுட்டிக் காட்டுகிறான்.]

தா. கண்ணன் : உன் பை இதோ இருக்கிறதே!

அம்பலம் : (பையை எடுத்துக்கொண்டு) இதே பைதான்! இந்தாங்க முந்நூறு
   பொன் என்று தொகையைச் சொன்னால் அதன் பெருமை உங்களுக்குப்
   புரியாது. முந்நூறு பொன்னைக் கண்ணால் கண்டால்தான் அதன்
   மதிப்புத் தெரியும். உடனே நீங்கள் எங்கள் ஐயாவைப் பற்றி ஒரு பாடல்
   பாடி விடுவீர்கள்