தா. கண்ணன் :
அம்பலம், விளையாட்டுக்கு இது நேரமில்லை.
புலவர்களைப் பொன் கொடுத்து
வாங்கலாம் என்னும் தனபதியாரின்
இறுமாப்பைக் குறைக்க வேண்டும். சொன்னபடி செய்!
அம்பலம் :
சுமை...பெருஞ்சுமை...யார் முகத்தில் இன்று விழிச்சேனோ!
[அம்பலம் ஆயிரம் பொன் மூட்டையைத் தலையில் வைத்துக் கொண்டு,
முந்நூறு பொன் மூட்டையைக்
கையில்
பற்றிக்கொண்டு செல்கிறான்.]
-திரை-
காட்சி - 11
இடம் :
மதுரையில் பாண்டியனின் ஆலோசனை மண்டபம்.
நேரம் :
காலை.
தோன்றுவோர் :
சுந்தரபாண்டியன், குருகுலத்தரையன், காங்கேயன், மழவர்
மாணிக்கம்.
[சுந்தரபாண்டியன் ஆசனத்தில் அமர்ந்திருக்க, அதன் இருபுறமும்
அமைச்சரும் படைத் தலைவர்
இருவரும் வீற்றிருக்கின்றனர்]
சுந்தரபாண்டியன் :
அமைச்சரே, சோழ நாட்டிலிருந்து ஒற்றர் தலைவன்
திரும்பிவிட்டதாகச்
சொன்னீர்களே! அவன் தெரிவித்த சேதி என்ன? |