பக்கம் எண் :

காட்சி - 1175

   தகர்த்தெறியுங்கள், தரை மட்டமாக்குங்கள்! எரித்துப் பொசுக்குங்கள்!

காங்கேயன் : எல்லாக் கட்டடங்களையுமா?

சு. பாண்டியன் : ஆம்! எல்லாக் கட்டடங்களையும் இடித்துத் தள்ளுங்கள்.

குருகுலத்தரையன் : அரசே, கோவில்களுக்காவது விலக்களியுங்கள்!

சு. பாண்டியன் : இறைவன் உறைவிடம் தவிர, ஏனையவற்றை இடித்துத்
  தள்ளுங்கள். நான் அந்த ஊரில் உலா வரும்போது புல்லின்
  உயரத்தில்கூட ஒரு கட்டடம், ஒரு சுவர், ஒரு தூண் நிமிர்ந்திருக்கக்
  கூடாது.

காங்கேயன் ; உத்தரவு அரசே!

சு. பாண்டியன் : அமைச்சரே, நம் அவைக்களப் புலவர் காரணை
   விழுப்பரையரை நம்முடன் வரச்சொல்லுங்கள்! பாண்டியனின் மகத்தான
   வெற்றியை, சோழனின் மாபெரும் வீழ்ச்சியை நேரிலே கண்டு பாடட்டும்!
   அதைப்பின்னே வரும் பாண்டி நாட்டு மக்கள் பாடிப்பாடிப் பெருமித
   முறட்டும்.

குருகுலத்தரையன் : அப்படியே, அரசே!

சு. பாண்டியன் : இருநாளில் படை புறப்படவேண்டும். அது புறப்படும்
   நேரத்துக்கு இரு நொடிகளுக்கு முன்னேகூட நம் வீரர்களுக்குத்
   தெரியக்கூடாது. பாண்டியன் படையெடுத்து வருகிறான் என்ற செய்தி
   சோழனின் செவியை எட்டும்போது, நமது படை