பக்கம் எண் :

78வளவன் பரிசு

   கொண்டே உட்கார்ந்திருக்கிறீர்களே. இது என்ன பொற்காசுகள் உள்ள
   பையா? அல்லது நவமணிகளடங்கிய பையா?

தனபதி : ஆயிரம் பொற்காசுகள் அடங்கிய பை! அவ்வளவும்
   மாற்றுக்குறையாத மாசற்ற பொன்

    [பையை அவிழ்த்துப் பொற்காசுகளைக் கலகலவென ஓசையெழத் தம்
    முன்னே கொட்டுகிறார் தனபதி.]

அன்னம் : அப்பா, உங்களுக்கு வரவரப் பொருளாசை வரம்பு
   மீறிப்போகிறது. பசித்த நேரத்தில் உணவில் நாட்டம் செலுத்தாமல்
   பொன்னைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்களே!

தனபதி : அன்னம்! பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை என்று
   சொல்லியிருக்கிறார் பொய்யாமொழிப் புலவர். பொருளுக்கு
  மயங்காதவர்கள் பூவுலகத்தில் இல்லை; ஏன் மூவுலகத்திலும் இல்லை
  என்று நினைத்தேன். என் ஆணவத்தை அடக்கிவிட்டான், அந்தப்
  புலவன்.

அன்னம் : எந்தப் புலவனப்பா?

தனபதி : அவன்தானம்மா. நீ சொன்னாயே, அந்தத் தாமரைக்கண்ணன்.
 
அன்னம் : தாமரைக்கண்ணன் உங்கள் ஆணவத்தை அடக்கிவிட்டாரா?
   எப்படி ஏன்?

தனபதி : தாமரைக்கண்ணன் என்னைப் பாடமாட்டான் என்று நீ
   சொன்னாய், அவன் என்னைப் பாடும்படி செய்வதாக நான் கூறினேன்.
   அவனை அழைத்து ‘என்னைப் பாடு’ என்று கேட்டபோது,