பக்கம் எண் :

காட்சி - 1281

தனபதி : ஆம்! அவன் என்னைப் பாடினால் உன்னை மணக்கலாம்!
  பொன்னை விரும்பாத புலவன் என் பெண்ணை விரும்புகிறான்! அவன்
  உன்னை மணக்க வேண்டுமானால், என்னைப் பற்றிப் பாடவேண்டும்!
  இல்லையேல் உன்னை மறக்கவேண்டும்! இதை அவனிடம் நீயே சொல்லி,
  ஒரு பாடல் பெற்று வா!

அன்னம் : அப்பா, அவர் புலவர். பாடும் புகழுடையாரையன்றி வேறு
  யாரையும் எதற்காகவும் பாடமாட்டார்! பொன்னுக்காகவும் பாடமாட்டார்!
  உங்கள் பெண்ணுக்காகவும் பாடமாட்டார்! உங்கள் நிபந்தனையை
  வற்புறுத்தினால் என் காதலைத் துறப்பார்! என்னை மறப்பார்!

தனபதி : அதெல்லாம் எனக்குத் தெரியாது! தாமரைக்கண்ணன் என்னைப்
  பாடினால் உன்னைப் பரிசாகத் தருவேன்! மறுத்தால் நீ அவனை
  மறந்துவிடவேண்டும்! அவனைக் காண்பதும், காதல் பொங்கப் பேசுவதும்
  நிற்கவேண்டும்! இதை நான் மாற்றிக் கொள்ளப் போவதில்லை.

    [உறுதயான குரலில் உரைத்த தனபதி எழுந்து செல்கிறார்.]

அன்னம் : தமிழ்த்தாயே, ஈதென்ன சோதனை: என்காதல் நிறைவேறாக்
   காதல்தானா?

           [கண் கலங்குகிறாள்.]

                         
-திரை-