பக்கம் எண் :

காட்சி - 1387

இராசேந்திரன் : பாண்டியன் வென்ற ஊரிலுள்ள மாடமாளிகைகளை,
  கூடகோபுரங்களை இடித்துத் தள்ளி எரித்துப் பொசுக்கி வருகிறானாமே!
  குச்சு வீடுகளையும் விட்டுவைக்காமல் கொளுத்தி மகிழ்கிறானாமே. இன்று
  வந்த ஒற்றன் சொன்னான். உங்களிடமும் தெரிவித்தானாம்.

பிருமா : உண்மைதான் இளவரசே! கோயில்களைத் தவிர வேறெதுவும்
  நிமிர்ந்து நிற்கக் கூடாது என்று ஆணையிட்டுள்ளானாம் பாண்டியன்.

இராசேந்திரன் : அமைச்சரே, பாண்டியனது படையின் ஒரு பகுதி
  உறையூரையும் மறுபகுதி தஞ்சையையும் சூழ்ந்துகொண்டதாக ஒற்றன்
  சொன்னான். இராசராசர் எழுப்பிய பெரிய கோயில் தப்பிவிடும். ஆனால்
  உறையூரிலுள்ள தமிழ்க் கோயில் தப்புமா?

பிருமா : தமிழ்க் கோயிலா?

இராசேந்திரன் : ஆம்! தமிழ்க் கோயில்தான்! கரிகால் வளவன் தன்மீது
  பாடப்பட்ட புகழ் மாலையான பட்டினப்பாலைக்குப் பரிசாகக்
  கொடுத்தானே, பதினாறுகால் மண்டபம்....அந்தப் பரிசில் மண்டபந்தான்
  பைந்தமிழ்க் கோயில்; பழிதீர்க்கத் துடிக்கும் வெறியில் பாண்டியன் அந்தத்
  தமிழ்க் கோயிலைத் தகர்த்துவிட்டால், அது சோழர் குடிக்குத் தீராத
  களங்கமாகும். தந்தையே, கண்ணன் மண்டபத்தைக்
  கலைமண்டபமாக்குவதாக வாக்களித்தோம்! அது கற்குவியலாகாமலாவது
  தடுக்க வேண்டாமா?

புவன : வளவன் ஒரு புலவனுக்கு வழங்கிய பரிசில் மண்டபம், நமது
  அரசவை மண்டபத்தைக் காட்டிலும் உயர்ந்தது; உன்னதமானது. அதைக்
  காத்துத்