பக்கம் எண் :

88வளவன் பரிசு

  தான் தீர வேண்டும். ஆனால், கோப்பெருஞ்சிங்கன்
  திருமுனைப்பாடியிலிருந்து பெரும்படையுடன் பாண்டியனுக்கு உதவ வரப்
  போகிறானாமே....

பிருமா : தொண்டை மண்டலத்துச் சிற்றரசன் சம்புவராயனும்
  பாண்டியனுக்குத் துணைசெய்து நல்ல பெயர் தேடிக்கொள்ள
  முனையக்கூடும். அதனால் அரசரையும் அரசியையும் போசள
  நாட்டுக்கனுப்ப ஏற்பாடு செய்துள்ளேன். இளவரசே! உங்களையும்
  அவர்களுடன் அனுப்புவது என் திட்டம். இந்நிலையில் பாண்டியப்படை
  சூழ்ந்துகொண்ட உறையூருக்குப் போவது, உசிதமன்று.

இராசேந்திரன் : ஆயிரமாண்டாக நிமிர்ந்து நிற்கும் தமிழ் மண்டபம் நம்
  காலத்தே வீழ்வது நாணம் தருவது தந்தையே. நீங்களும் அன்னையாரும்
  போசளம் செல்லுங்கள். நான் உறையூர் செல்கிறேன். பட்டினப்பாலைப்
  பரிசில் மண்டபத்தைக் காக்க முனைகிறேன். சென்று வருகிறேன்.

புவன : மகனே, இராசேந்திரா!

     [அரசி அழைத்துக் கொண்டிருக்கும் போதே இராசேந்திரன்
     வெளியேறுகிறான்.]

இராசராசர் : தேவி, புயல் போலப் புறப்பட்ட புதல்வனோடு நானும்
  புறப்படத்தான் விரும்புகிறேன். உறையூரின் பதினாறுகால் மண்டபம்
  சோழர் குலத்தின் புகழ் விளக்கு! இமயத்தை வென்ற வாகைச் செயல்
  போலச் சிறந்தது. பதினாறுகால் மண்டத்தைப் புலவனுக்கு வளவன்
  வழங்கிய ஈகைச் செயல் !  அதைக் காப்பது சோழரின் கடமை. அரசி,
  அந்தப்