புனிதக் கடமைக்காகப் புறப்பட்ட புதல்வனோடு நானும் செல்லவே
விரும்பினேன்! ஆனால் பாண்டியனிடம்
சிக்கும் சோழநாட்டை,
இன்றில்லாவிட்டாலும், நாளை மீட்கும் கடமை எனக்கிருக்கிறது.
அதற்காகத்தான் நான் இராசேந்திரனுடன் செல்லவில்லை.
பிருமா :
அரசே, இளவரசர் அறிவும் ஆற்றலும் பெற்றவர். அவர்க்கு ஆபத்து
நேராது என்றே என்
நெஞ்சம் நினைக்கிறது. இனித் தாமதிக்க வேண்டாம்.
புறப்படுங்கள், அரசே! மிக விரைவில்
போசளத்தில் சந்திக்கிறேன்!
இராசராசர் :
சேர பாண்டிய நாடுகளை வென்று, திரிபுவன வீர தேவன்
என்னும் சிறப்புப் பெயர்
பெற்ற குலோத்துங்க சக்கரவர்த்தியின் புதல்வன்,
உயிர் காக்க ஓடுவது விதியின் விளையாட்டுப்
போலும்!
பிருமா :
நீங்கள் ஓடுவது உங்கள் உயிரைக் காக்கவன்று: சூரியனில்
தொடங்கிய சோழர் குலத்துக்குரிய
இந்தப் புனல் நாட்டை மீட்க! அதனால்
உள்ளமுடையாமல் புறப்படுங்கள்.
இராசராசர் :
தேவி, புறப்படு!
[அரசர் அரசி இருவரும் புறப்படுகின்றனர், அமைச்சர் அவர்களை
அழைத்துக்கொண்டு செல்கிறார்.]
-திரை- |