6.5 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை பெருங்கதை பற்றிச் சில செய்திகளை அறிந்தீர்கள். இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

  • பெருங்கதை பற்றிய பொதுவான அறிமுகச் செய்திகளை அறிந்திருப்பீர்கள்.

  • பெருங்கதை பற்றி உரையாசிரியர் தந்த செய்திகளை உணர்ந்திருப்பீர்கள்.

  • பெருங்கதையின் பெயர் விளக்கம் தொடர்பான தகவல்களை அறிந்திருப்பீர்கள்.

  • பெருங்கதையின் ஆசிரியர் கொங்குவேளிர் வாழ்க்கை வரலாற்றை அறிந்திருப்பீர்கள்.

  • பெருங்கதையின் காப்பிய அமைப்பையும் கதையையும் தெரிந்து கொண்டிருப்பீர்கள்.

  • பெருங்கதையின் கவிதை நயம், வாழ்வியல் தத்துவங்கள், வருணனைகள், உவமைகள், உணர்ச்சிகள் முதலியவற்றை அறிந்திருப்பீர்கள்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.

பெருங்கதையின் வழி அறிய வரும் வாழ்வியல் தத்துவங்கள் நான்கினைக் குறிப்பிடுக.

விடை

2.

பெருங்கதை குறிப்பிடும் எந்திரப் பொறி ஒன்றினை விவரிக்க.

விடை

3.

வாசவதத்தையின் புருவத்திற்கும் கண்களுக்கும் கூறப்படும் உவமைகள் எவை?

விடை

4.

முல்லை நிலமும் கார்காலமும் யாருக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளன?

விடை