1.3 சொல் வகைகள்

தமிழில் இலக்கண நோக்கில் அமைந்த சொல் வகைகள் நான்கு. அவை,

1) பெயர்ச்சொல்
2) வினைச்சொல்
3) இடைச்சொல்
4) உரிச்சொல்

இவை தவிர இலக்கிய வழக்கியல் நோக்கில் சொற்களை மேலும் நான்கு வகைப்படுத்தி உள்ளனர். அவை,

1) இயற்சொல்
2) திரிசொல்
3) திசைச்சொல்
4) வடசொல்

பெயர், வினை இவற்றை இடமாகக் கொண்டு, அவற்றைச் சார்ந்து வருகின்ற இடைச்சொல், உரிச்சொல் குறித்து இனி வரும் பாடங்களில் விரிவாகக் காண்போம்.


தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.
சொல் என்றால் என்ன?
[விடை]
2.
ஓரெழுத்து ஒரு மொழி என்றால் என்ன?
[விடை]
3.
பகாப்பதம் என்றால் என்ன?
[விடை]
4.
பகுபத உறுப்புகள் எத்தனை? அவை யாவை?
[விடை]
5.

இலக்கண நோக்கில் சொல் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

[விடை]
6.
கண்ணன் என்ற பெயரைப் பகுத்து அதில் உள்ள பகுபத உறுப்புகளைக் கூறுக.
[விடை]