நண்பர்களே! இப்பாடத்தின்
மூலம் என்னென்ன தெரிந்து கொண்டீர்கள் என்று எண்ணிப் பாருங்கள்
•
இலக்கியத்தில் பேசப்படும் கருத்து வாசகனைச்
சென்றடைவதற்கு மொழியும் முக்கியப் பங்காற்றுகிறது.
•
ஒரே கருத்தில் பலர் இலக்கியம்
படைக்கும் போது அப்படைப்புகளில் வேறுபடுவதற்குப் படைப்பாளனின் ஆளுமையும்
வாழ்க்கைப் பின்னணியும் குறிப்பாக அவர்கள் மொழியைக் கையாளும் திறனும்
முக்கியக் காரணிகளாகின்றன.
•
தமிழ் இலக்கியம் வடிவ நிலையில்
பல மாற்றங்களைப் பெற்று வந்துள்ளது. கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல்
என்று அவை அமைகின்றன.
•
கவிதையில் மரபுக் கவிதையாயினும் புதுக்கவிதையாயினும்
சொல்லும் தொடரும் மொழியைக் கையாளும் விதத்தை மாற்றப் பெரும்பணி ஆற்றுகின்றன.
உவமை, உருவகம், குறியீடு, கற்பனை போன்ற உத்திகள் இன்றியமையா இடம் பெறுகின்றன.
•
கட்டுரை மொழி செந்தமிழில் தொடங்கி, எளிய
தமிழாகப் பாரதியால் உருப்பெற்று, மிகவும் எளிய நடையாக மு.வ.வின் நடையில்
பரிணாமம் பெறுகிறது.
•
சிறுகதை மொழியில் கூறவரும் கருத்தைப் புரிய
வைக்கத் தகுந்த சொற்பயன்பாடும் தொடரமைப்புக்களும் உதவுகின்றன.
•
நாவல்களில் இலக்கிய நடை வடசொல் கலப்புடைதாய்,
தனித் தமிழாய், அடுக்கு மொழியாய், கவர்ச்சி நடையாய், பேச்சுநடைச் சாயல்
மிக்கதாய் வளர்ந்து இன்று மாறுபட்டதாயும் கலக மொழிநடையாயும் பரிணமித்து
நிற்கிறது.
•
இவ்வாறு இலக்கியத்தில் சொல்ல வரும் கருத்தை
மனத்தில் பதிய வைக்கவும் அக்குறிப்பிட்ட இலக்கியத்தை மக்கள் மனத்தில்
நீங்கா இடம்பெறச் செய்யவும் மொழி குறிப்பிட்ட பங்காற்றுகிறது.
தன்மதிப்பீடு : வினாக்கள் - II
1.
புதுக்கவிதை
மொழியில் இன்றியமையா இடம்பெறும் உத்தி யாது?