5.6 தொகுப்புரை

ஒரு மொழியில் பிற மொழிச் சொற்கள் கலப்பதற்குக் காரணங்களாக, புதிய பொருட் பயன்பாடு, குறிப்பிட்ட துறையைக் கற்றல், அரசியல், சமயம், வணிகம் காரணமாக ஏற்படும் தொடர்புகள் முதலியவை அமையும்.
தமிழில் வடசொற் கலப்பு காலந்தோறும் இருந்து கொண்டே வந்திருக்கிறது. தமிழில் வடசொற் கலப்பு அளவிறந்த வகையில் உள்ளது.
முண்டா மொழி தமிழுடன் உறவு கொண்ட தொன்மையான மொழி ஆகும்.
தமிழில் மேலைநாட்டு மொழிகள் பலவும் கீழை நாட்டு மொழிகள் பலவும் தம் ஆதிக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
பிற நாட்டு மொழிகள் பலவற்றிலும் தன் ஆதிக்கத்தைத் தமிழ் செலுத்தியுள்ளது.
மொழிக் கலப்பு என்பது உலக மொழி வரலாற்றில் தவிர்க்க முடியாததாகிறது. பிற மொழிகளுடன் கலப்பு உள்ள மொழியே வளரும் என்பது மொழியியல் நியதியும் ஆகும்.

தன்மதிப்பீடு : வினாக்கள் - II
1.
தமிழ்நாடு சீனாவோடு கொண்டிருந்த தொடர்பினை விளக்குக.
விடை
2.
அரபு மொழி தமிழில் கலந்த சூழலை விளக்குக.
விடை
3.
தமிழில் கலந்துள்ள சில போர்ச்சுகீசியச் சொற்களைத் தருக.
விடை
4.
டச்சுக்காரர்களின் வருகையை விளக்குக.
விடை
5.
பிரெஞ்சு மொழிச் சொற்கள் தமிழில் கலந்ததற்கான காரணம் யாது?
விடை