2.8 தொகுப்புரை பாரததேசத்தின் பெருமை, பாரத மக்கள், அவர்களது விடுதலை வேட்கை, விடுதலை பெறுவதால் அடையும் மகிழ்ச்சி, பயன் இவை பற்றியும் தேசத்தலைவர்கள், பிற நாட்டுத் தலைவர்கள் குறித்தும் தமது தேசியப் பாடல்களில் மிகச் சிறந்த கருத்துகளைப் பாரதியார் பாடியுள்ளார். தேச உணர்வு, மனிதாபிமானம், தொலைநோக்குப் பார்வை, நல்லார்வ நலம், விடுதலை வேட்கை போன்ற பாரதியின் அரும் பண்புகளை அவருடைய தேசியப் பாடல்களின் வழியே காணமுடிகிறது.
|