இப்பாடப் பகுதியிலிருந்து கீழ்க்காணும் செய்திகளை உணர்ந்து தெளிந்தோம்.
- வரைதல் வேட்கை எனப்படும திருமண, விருப்பமும் அதற்கான காரணமும்.
- திருமணத்திற்கான பொருள் ஈட்டுதல் காரணமாகத்
தலைவன் மேற்கொள்ளும் பிரிவு.
- தலைவனது பிரிவைப் பொறுத்துக்கொள்ள இயலாத
தலைவியின் மென்மையான உளப்பாங்கு.
- தலைவியைப் போலவே, தலைவனும், பிரிவைத் தாங்காது
பிரிவிலும், மீண்டு வரும் போதும் அவளையே
நினைத்திருந்த உயர் மனப்பாங்கு.
- தலைவன் தலைவி இருவரையும் நெறிப்படுத்தி
உரையாடும் தோழியின் மதிநுட்பம் மிக்க செயல்பாடு.
இத்தகைய செய்திகளைக் கற்றுணர்வதன் மூலம் தலைமக்கள்
களவு வாழ்க்கையில் உயர்ந்த உள்ளம் உடையவர்களாகத் திகழ்ந்தமையை அறிய முடிகிறது.
|