4.5 தொகுப்புரை | |||||||||||||||||||
நாடகத் தமிழுக்குப் புத்துயிர் தந்தவர் பேராசிரியர்
சுந்தரம் பிள்ளை. இவரது முதல் நாடகமே கவிதை நாடகம்.
அதுவும் நடிப்பதற்கு உரிய நாடகம்; மீண்டும் மீண்டும்
படித்து இன்புறுவதற்கு உரிய நாடகம்; அரங்க அமைவுக்கு
இடம் தரும் அழகிய காட்சிப் பின்புலங்கள், மொழியின்
செவ்வியல்பு நிலையை உறுதி செய்வதற்கு ஏற்ற நாடக
உரையாடல்கள் கொண்ட நாடகம் எனப் பல நிலையிலும்
தமிழன்னையின் மணிமகுடமாய் மனோன்மணீயம் திகழ்கிறது
என்பதை இப்பாடத்தில் இடம்பெற்ற செய்திகளின் வாயிலாக
அறிந்திருப்பீர்கள். |
|||||||||||||||||||
|