Primary tabs
-
5.4 செல்வம்
‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்னும் தொடர் மக்களிடையே பெரிதும் போற்றப்படுகிறது. திரவியம் என்பது செல்வத்தைக் குறிக்கும். கடல் கடந்து சென்றாவது செல்வத்தைத் தேடு என்பதே இப்பழமொழியின் பொருள். இந்த உலகில் செல்வம் இல்லாதவனை யாரும் மதிக்கமாட்டார்கள். எனவே செல்வத்தை ஈட்டவேண்டும் என்று பல அறிஞர்கள் பாடியுள்ளனர்.
இன்சொல்லன் தாழ்நடையன் ஆயினும்ஒன்று இல்லானேல்
வன்சொல்லின் அல்லது வாய்திறவா - என்சொலினும்
கைத்துடையான் கால்கீழ் ஒதுங்கும் கடல்ஞாலம்
பித்துஉடைய அல்ல பிற (10)(தாழ்நடையன் = பணிவானவன், ஒன்று = செல்வம், வன்சொல் = கொடுஞ்சொல், கைத்துடையான் = செல்வம் உடையவன், ஞாலம் = உலகம்)
ஒருவன் எல்லோரிடமும் இனிமையாகப் பேசிப் பழகும் இயல்பு கொண்டவன்; பணிந்து அடங்கி நடக்கும் பண்பு கொண்டவன் என்று அனைவராலும் அறியப்பட்டாலும் அவனிடம் செல்வம் இல்லை என்றால் அவனுடன் யாரும் இனிமையாகப் பேசிப் பழகுவது இல்லை. மாறாக அவனை நோக்கிக் கொடிய சொற்களையே வீசுவார்கள்.
ஒருவன் யாரிடமும் இனிமையாகப் பேசிப் பழகமாட்டான்; பணிந்து அடங்கி நடக்க மாட்டான் என்பது எல்லோருக்கும் தெரிந்தாலும் அவனிடம் செல்வம் இருந்தது என்றால் அவனுடன் இனிமையாகப் பேசிப் பழகுவார்கள். உலகில் பலரும் அவன் காலால் இடும் வேலையைச் செய்வதற்குக் காத்துக் கிடப்பார்கள். இவ்வாறு செல்வத்தின் நிலையைக் குமரகுருபரர் விளக்கியுள்ளார்.
5.4.1 ஈயாத செல்வன்செல்வத்தை ஒருவன் மிகுதியாகப் பெற்றிருந்தால் எல்லோராலும் போற்றப்படுகிறான். செல்வம் அவனிடம் இருக்கிறது என்னும் தகுதியைத் தவிர வேறு எந்தத் தகுதியும் அவனிடம் இல்லை என்றாலும் அவனைப் புகழ்கிறார்கள். அவன் பிறருக்குப் பொருள் வழங்கும் ஈகைக் குணம் இல்லாதவன் என்று தெரிந்தும் போற்றுகிறார்கள். இதை,
(இவறன்மை = ஈயாத் தன்மை, உடையாரை = செல்வம் உடையவரை, குறையிரந்து = குறை நீங்கிடப் பொருள் கேட்டு, குற்றேவல் = சிறு எடுபிடி வேலைகள், நோலாதார் = தவ வலிமை இல்லாதவர், நோற்றார் = தவ வலிமை உடையவர், கற்பு அன்றே = கல்வி அறிவு உடைய செயல் தான், அன்று = இல்லை)
தவ வலிமை இல்லாதவர்கள், தவ வலிமை உடையவர்களைப் பின்பற்றி வாழ்தல் அறிவுடைய செயல்தான்; அறிவற்ற செயல் என்று சொல்ல இயலாது. அதுபோல, பிறருக்குப் பொருள் வழங்காத இயல்பு உடையவன் என்று தெரிந்தும் அவன் பொருள் தருவான் என்று எண்ணி அவனுக்குச் சிறு எடுபிடி வேலைகளைச் செய்து அவனைப் பின்பற்றி வாழ்வதும் அறிவுடைய செயல்தானோ? என்று குமரகுருபரர் வினா எழுப்பியுள்ளார். இப்பாடல் வழியாகச் செல்வத்தை ஈயாதவர்களின் இழிவையும் செல்வம் வேண்டி அவர்கள் பின்னால் செல்கின்றவர்களின் அவல நிலையையும் வெளிக்காட்டியுள்ளார்.
செல்வத்தின் பயன் பிறருக்குப் பயன்படும் தன்மையில் இருக்கிறது. பிறருக்கு எதுவும் ஈயாதவனிடம் இருக்கும் செல்வத்தால் எந்தப் பயனும் கிடையாது. செல்வத்தின் பயன்பாடு எந்த வகைகளில் இருக்கிறது என்பதைப் பின்வரும் பாடல் தெரிவிக்கிறது.
(பொதுமகள் = விலைமகள், தலையாயார் = சிறந்தவர், கலன் அழிந்த = தாலி இழந்த, கைம்மையார் = கணவனை இழந்தார், கடையாயார் = கருமியர்)
யாரிடம் இருக்கும் செல்வம் பிறருக்குப் பயன்படும் என்பதை விளக்குவதற்குக் குமரகுருபரர் மூவகைப் பெண்களை உவமையாகக் காட்டியுள்ளார். அந்த மூவகைப் பெண்களும் யார் என்பதைப் பார்ப்போமா? 1. விலைமகள் 2. குலமகள் 3. கைம்பெண்
விலைமகள் என்பவள் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கட்டுப்பாட்டில் வாழ்வதில்லை. எனவே அவள் எல்லோருக்கும் பொதுவானவளாக இருக்கின்றாள்.
ஒருவனுக்கு ஒருத்தி என்னும் குடும்ப எல்லையில் வாழ்பவள் குலமகள். எனவே, அவள் அவளது கணவனுக்கு மட்டுமே உரியவள்.
கணவனை இழந்தவள் கைம்பெண். அவள் யாருக்கும் உரியவள் அல்லள்.
விலைமகள் எல்லோருக்கும் பொதுவானவளாக வாழ்வது போல் சிறந்தவர்களிடம் இருக்கும் செல்வம் எல்லோருக்கும் பயன்படும். குலமகள் கணவனுக்கு மட்டும் உரியவளாக வாழ்வதுபோல் இடைப்பட்டாரின் செல்வம் அவர்களின் குடும்பத்திற்கு மட்டும் பயன்படும். கைம்பெண் யாருக்கும் உரியவளாய் இல்லாமல் வாழ்வது போல் கடைப்பட்டாரின் செல்வமும் யாருக்கும் பயன்படுவது இல்லை என்று இந்தப் பாடல் விளக்குகிறது.
இப்பாடலில் விலைமகள், பண்பில் இழிந்தவள் என்றாலும் அவளது பொதுத் தன்மையைக் கருதி, சிறந்தவர்களின் செல்வம் பொதுவாக எல்லோருக்கும் பயன்படும் நிலைக்கு அதனை உவமைப்படுத்தியுள்ளார், குமரகுருபரர்.
செல்வம் இருப்பவனிடம் ஈகைத்தன்மை இல்லை என்றால் அச்செல்வத்தால் பயன் இல்லை. எனவே ஈகைத்தன்மை இல்லாதவனிடம் இருக்கும் செல்வத்தை விடவும் செல்வம் இல்லாதவனிடம் இருக்கும் வறுமையே சிறப்புடையது என்கிறார் குமரகுருபரர். செல்வம் இல்லாதவனின் வறுமை ஏன் சிறப்பிக்கப் பட்டுள்ளது என்பதை நாம் அறிய வேண்டாமா? இதோ நீதிநெறி விளக்கப் பாடல் அதை விளக்குகிறது.
(வள்ளன்மை = வள்ளல்தன்மை, நல்குரவு = வறுமை, கொன்னே = அசைச்சொல் [பொருள் இல்லாச் சொல்], கண்ணறையன் = இரக்கம் இல்லாதவன்)
செல்வம் இருப்பவன், செல்வம் இல்லாதவர்களுக்குப் பொருளை வழங்கவில்லை என்றால் அவனைக் கருணை இல்லாதவன், அன்பு இல்லாதவன், இரக்கம் இல்லாதவன் என்று எல்லோரும் இகழ்வார்கள். ஆனால் வறியவனிடம் செல்வம் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். அவனால் பிறருக்கு எதையும் கொடுக்க இயலாது என்று உணர்ந்து வறியவனை யாரும் இகழ்வது இல்லை. எனவே வறியவனே சிறந்தவன் என்று கருதப்படுகிறான்.