சிறப்புப்பாயிரம் _____ “உயிரிளங்குமரன்” நாடக நூலாசிரியரும், கலாவிற்பன்னரும், கவிஞருமாகிய நவாலியூர், ஸ்ரீமாந் க. சோமசுந்தரப் புலவரவர்கள் இயற்றியது. ஆசிரியப்பா | விண்டொடு நெடுவரை மந்தரந் நிறுவி அண்டரும் பிறரும் பண்டைநாட் கடையப் புண்ணியப் பாற்கட லீன்ற தண்ணிய விண்ணவ ரமுதம் வெள்கி வாயூற |
5 | நூற்பய னாகிய நாற்பய னுடனே நாச்சுவை யென்றா செவிச்சுவை யென்றா மேற்படு மொன்பது விதச்சுவை யென்றா பல்வகைச் சுவையு மெல்லவர் தமக்கும் உண்டிட வுதவுந் தண்டா வமுதருள் |
10 | செந்தமிழ்த் தெய்வத் திருமொழிக் கடறருஞ் சந்தனப் பொதியத் தவமுனி தனாது சுந்தரச் சேவடி தொழுதுகற் றுயர்ந்த பல்காப் பியமுணர் தொல்காப் பியனருள் ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப் பியநூல் |
15 | எழுத்துஞ் சொல்லும் பொருளு மென்ன வழுத்திய மூன்று வகுப்பிற் றாங்கதன் எழுத்தும் சொல்லும் பழுத்தநூற் புலவர் உரையுடன் வைத்துப் புரைதப வாய்ந்து கற்போர் முட்டறப் பொற்புடன் வெளியிட் |
20 | டந்நா ளருளின னாங்கது போல வன்னமும் பதமும் மாசறக் கற்ற பின்னரா ராயும் பெரும்பொருள் கற்புழிக் கொள்வோ ருள்ளமுங் கொடுப்போ ரறிவும் ஒள்ளிய வுணர்வுபெற் றுவகை பூப்பக் |
25 | கண்ணிய வுரையொடு நுண்ணிதி னாய்ந்து |
|