முகப்பு

தொடக்கம்

xvii

எழுதா வெழுத்திற் பழுதறப் பதிப்பித்
துழுவ லன்புட னுலகினுக் களித்தனன்,
மன்னிய சிறப்பிற் சுன்னையம் பதியிற்
றிருமகள் நிலையத் தொருதனி யதிபதி
65ஈழ கேசரித் தாளினைப் பரப்புந்
தாழாச் சிறப்பிற் றண்டமி ழறிஞன்
நன்னய மிகுந்தபொன்னைய நாமம்
மண்ணகம் விளங்கிட வந்த
புண்ணிய முயற்சிப் புகழ்ப்பெரி யோனே.

______

கொழும்பு அரசினர் கல்லூரித் தமிழாசிரியராயிருந்தவரும்,வித்தகப் பத்திராசிரியரும்,சுன்னாகம், அ. குமாரசுவாமிப் புலவரவர்களிடங் கற்றுவிற்பன்னராகி விளங்குபவருமாகிய தென்கோவை, பண்டிதர் ஸ்ரீமாந் ச. கந்தையபிள்ளை

அவர்கள் இயற்றியது.

ஆசிரியப்பா

அமிர்தமா ருருவா மருணிலை யளிக்குந்
தொல்காப் பியனெறி தோன்றத் தெரிக்குந்
தொல்காப் பியமெனுந் தொல்லிய னூலின்
மெய்ப்பாடு முதலாச் செப்புநான் கியலையும்
5பேரா சிரியராம் புலவர் பெருந்தகை
உலகிய னாடி யுஞற்றுபே ருரையுடன்
பிரதிபல கொண்டு வழுவற நாடிக்
கற்றோர் மற்றோர் யாவருங் கையுறு
கனியெனச் செம்பொருள் கண்டுநனி மகிழக்
10குறிப்புரை விரிவா னெறிப்பட நிகழ்த்தினன்;
பன்மாண் புறுவளம் பழுநிய தொன்மா
இலங்கைப் பெயரிய வீழநன் னாட்டின்
திருமுக மாகி மருவியாழ்ப் பாணப்
புன்னையம் பதியிற் றன்னிகர் காசிப
15குலவிளக் காகிக் குலவுபே ரறிஞன்;
முன் பக்கம்

மேல்

அடுத்த பக்கம்