முகப்பு |
ஆலம்பேரி சாத்தனார் |
152. நெய்தல் |
மடலே காமம் தந்தது; அலரே |
||
மிடை பூ எருக்கின் அலர் தந்தன்றே; |
||
இலங்கு கதிர் மழுங்கி, எல் விசும்பு படர, |
||
புலம்பு தந்தன்றே, புகன்று செய் மண்டிலம்; |
||
5 |
எல்லாம் தந்ததன்தலையும் பையென |
|
வடந்தை துவலை தூவ, குடம்பைப் |
||
பெடை புணர் அன்றில் உயங்கு குரல் அளைஇ, |
||
கங்குலும் கையறவு தந்தன்று; |
||
யாங்கு ஆகுவென்கொல்; அளியென் யானே? | உரை | |
மடல் வலித்த தலைவன்முன்னிலைப் புறமொழியாக, தோழி கேட்பச்சொல்லியது.-ஆலம்பேரி சாத்தனார்
|
255. குறிஞ்சி |
கழுது கால் கிளர ஊர் மடிந்தன்றே; |
||
உரு கெழு மரபின் குறிஞ்சி பாடி, |
||
கடியுடை வியல் நகர்க் கானவர் துஞ்சார்; |
||
வயக் களிறு பொருத வாள் வரி உழுவை |
||
5 |
கல் முகைச் சிலம்பில் குழுமும்; அன்னோ!- |
|
மென் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும், இன்று அவர் |
||
வாரார்ஆயினோ நன்றுமன்தில்ல- |
||
உயர் வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னிப் |
||
பெயல் கால்மயங்கிய பொழுது கழி பானாள், |
||
10 |
திருமணி அரவுத் தேர்ந்து உழல, |
|
உருமுச் சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே! | உரை | |
ஆறு பார்த்து உற்றது.-ஆலம்பேரி சாத்தனார்
|
303. நெய்தல் |
ஒலி அவிந்து அடங்கி, யாமம் |
||
நள்ளென, |
||
கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே; |
||
தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை |
||
5 |
மன்றப் பெண்ணை வாங்கு மடற் குடம்பைத் |
|
துணை புணர் அன்றில் உயவுக் குரல் கேட்டொறும், |
||
'துஞ்சாக் கண்ணள், துயர் அடச் சாஅய், |
||
நம்வயின் வருந்தும், நன்னுதல்' என்பது |
||
உண்டுகொல்?-வாழி, தோழி!-தெண் கடல் |
||
10 |
வன் கைப் பரதவர் இட்ட செங் கோல் |
|
கொடு முடி அவ் வலை பரியப் போக்கி, |
||
கடு முரண் எறி சுறா வழங்கும் |
||
நெடுநீர்ச் சேர்ப்பன்தன் நெஞ்சத்தானே. | உரை | |
வேட்கை தாங்ககில்லாளாய்த் தோழிக்குத் தலைமகள் சொல்லியது;சிறைப்புறத்தான் என்பது மலிந்ததூஉம் ஆம்.-மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரி சாத்தனார்
|
338. நெய்தல் |
கடுங் கதிர் ஞாயிறு மலை மறைந்தன்றே; |
||
அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து, அவர் |
||
நெடுந் தேர் இன் ஒலி இரவும் தோன்றா; |
||
இறப்ப எவ்வம் நலியும், நின் நிலை; |
||
5 |
'நிறுத்தல் வேண்டும்' என்றி; நிலைப்ப |
|
யாங்ஙனம் விடுமோ மற்றே!-மால் கொள |
||
வியல் இரும் பரப்பின் இரை எழுந்து அருந்துபு, |
||
புலவு நாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய |
||
ஆடு அரைப் பெண்ணைத் தோடு மடல் ஏறி, |
||
10 |
கொடு வாய்ப் பேடைக் குடம்பைச் சேரிய, |
|
உயிர் செலக் கடைஇப் புணர் துணைப் |
||
பயிர்தல் ஆனா, பைதல்அம் குருகே? | உரை | |
ஒருவழித் தணந்த காலை ஆற்றாத தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது.-மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார்
|