முகப்பு |
இடைக்காடனார் |
142. முல்லை |
வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள், |
||
பாணி கொண்ட பல் கால் மெல் உறி |
||
ஞெலி கோல் கலப் பை அதளொடு சுருக்கி, |
||
பறிப் புறத்து இட்ட பால் நொடை இடையன் |
||
5 |
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப, |
|
தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளி |
||
சிறு தலைத் தொழுதி ஏமார்த்து அல்கும் |
||
புறவினதுவே-பொய்யா யாணர், |
||
அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும், |
||
10 |
முல்லை சான்ற கற்பின், |
|
மெல் இயற் குறுமகள் உறைவின், ஊரே. | உரை | |
வினை முற்றி மீளும்தலைமகன், தேர்ப்பாகற்குச் சொல்லியது.-இடைக்காடனார்
|
221. முல்லை |
மணி கண்டன்ன மா நிறக் கருவிளை |
||
ஒண் பூந் தோன்றியொடு தண் புதல் அணிய, |
||
பொன் தொடர்ந்தன்ன தகைய நன் மலர்க் |
||
கொன்றை ஒள் இணர் கோடுதொறும் தூங்க, |
||
5 |
வம்பு விரித்தன்ன செம் புலப் புறவில், |
|
நீர் அணிப் பெரு வழி நீள் இடைப் போழ, |
||
செல்க-பாக!-நின் செய்வினை நெடுந் தேர்: |
||
விருந்து விருப்புறூஉம் பெருந் தோட் குறுமகள், |
||
மின் ஒளிர் அவிர் இழை நல் நகர் விளங்க, |
||
10 |
நடை நாட் செய்த நவிலாச் சீறடிப் |
|
பூங் கட் புதல்வன் உறங்குவயின் ஒல்கி, |
||
'வந்தீக, எந்தை!' என்னும் |
||
அம் தீம் கிளவி கேட்கம் நாமே. | உரை | |
வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகன் பாகற்குச் சொல்லியது.-இடைக்காடனார்
|
316. முல்லை |
மடவது அம்ம, மணி நிற எழிலி- |
||
'மலரின் மௌவல் நலம் வரக் காட்டி, |
||
கயல் ஏர் உண்கண் கனங்குழை! இவை நின் |
||
எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம்' என, |
||
5 |
கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின் |
|
நல் நுதல் நீவிச் சென்றோர், தம் நசை |
||
வாய்த்து வரல் வாரா அளவை, அத்தக் |
||
கல் மிசை அடுக்கம் புதையக் கால் வீழ்த்து, |
||
தளி தரு தண் கார் தலைஇ, |
||
10 |
விளி இசைத்தன்றால், வியல் இடத்தானே. | உரை |
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தது.-இடைக்காடனார்
|