முகப்பு |
எயினந்தை மகன் இளங்கீரனார் |
269. பாலை |
குரும்பை மணிப் பூண் பெருஞ் செங் கிண்கிணிப் |
||
பால் ஆர் துவர் வாய்ப் பைம் பூட் புதல்வன், |
||
மாலைக் கட்டில், மார்பு ஊர்பு இழிய, |
||
அவ் எயிறு ஒழுகிய அவ் வாய் மாண் நகைச் |
||
5 |
செயிர் தீர் கொள்கை நம் உயிர் வெங் காதலி |
|
திருமுகத்து அலமரும் கண் இணைந்து அல்கலும், |
||
பெரும! வள்ளியின் பிணிக்கும் என்னார், |
||
சிறு பல் குன்றம் இறப்போர்; |
||
அறிவார் யார், அவர் முன்னியவ்வே? | உரை | |
தோழி வாயில் மறுத்தது; செலவு அழுங்குவித்ததூஉம் ஆம்.- எயினந்தை மகன் இளங்கீரனார்.
|
308. பாலை |
செல விரைவுற்ற அரவம் போற்றி, |
||
மலர் ஏர் உண்கண் பனி வர, ஆயிழை- |
||
யாம் தற் கரையவும், நாணினள் வருவோள், |
||
வேண்டாமையின் மென்மெல வந்து, |
||
5 |
வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி, |
|
வெறி கமழ் துறு முடி தயங்க, நல் வினைப் |
||
பொறி அழி பாவையின் கலங்கி, நெடிது நினைந்து, |
||
ஆகம் அடைதந்தோளே: அது கண்டு, |
||
ஈர் மண் செய்கை நீர் படு பசுங் கலம் |
||
10 |
பெரு மழைப் பெயற்கு ஏற்றாங்கு, எம் |
|
பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே. | உரை | |
நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்ட தலைமகன், தலைமகளை எய்தி ஆற்றானாய், நெஞ்சினைச் சொல்லிச் செலவு அழுங்கியது.-எயினந்தை மகன் இளங்கீரனார்
|
346. பாலை |
குண கடல் முகந்து, குடக்கு ஏர்பு இருளி, |
||
தண் கார் தலைஇய நிலம் தணி காலை, |
||
அரசு பகை நுவலும் அரு முனை இயவின், |
||
அழிந்த வேலி அம் குடிச் சீறூர் |
||
5 |
ஆள் இல் மன்றத்து, அல்கு வளி ஆட்ட, |
|
தாள் வலி ஆகிய வன்கண் இருக்கை, |
||
இன்று, நக்கனைமன் போலா-என்றும் |
||
நிறையுறு மதியின் இலங்கும் பொறையன் |
||
பெருந் தண் கொல்லிச் சிறு பசுங் குளவிக் |
||
10 |
கடி பதம் கமழும் கூந்தல் |
|
மட மா அரிவை தட மென் தோளே? | உரை | |
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் ஆற்றானாய்த் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-எயினந்தை மகன் இளங்கீரனார்
|