முகப்பு |
நொச்சி நியமங் கிழார் |
17. குறிஞ்சி |
நாள் மழை தலைஇய நல் நெடுங்குன்றத்து, |
||
மால் கடல் திரையின் இழிதரும் அருவி |
||
அகல் இருங் கானத்து அல்கு அணி நோக்கி, |
||
தாங்கவும் தகைவரை நில்லா நீர் சுழல்பு |
||
5 |
ஏந்து எழில் மழைக் கண் கலுழ்தலின், அன்னை, |
|
'எவன் செய்தனையோ? நின் இலங்கு எயிறு உண்கு' என, |
||
மெல்லிய இனிய கூறலின், வல் விரைந்து, |
||
உயிரினும் சிறந்த நாணும் நனி மறந்து, |
||
உரைத்தல் உய்ந்தனனே-தோழி!-சாரல், |
||
10 |
காந்தள் ஊதிய மணி நிறத் தும்பி |
|
தீம் தொடை நரம்பின் இமிரும் |
||
வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே. | உரை | |
முன்னிலைப்புறமொழியாகத் தலைமகள் தோழிக்குச்சொல்லியது.-நொச்சிநியமங்கிழார்
|
208. பாலை |
விறல் சால் விளங்கு இழை நெகிழ, விம்மி, |
||
அறல் போல் தெள் மணி இடை முலை நனைப்ப, |
||
விளிவு இல கலுழும் கண்ணொடு, பெரிது அழிந்து, |
||
எவன் இனைபு வாடுதி?-சுடர் நுதற் குறுமகள்!- |
||
5 |
செல்வார் அல்லர் நம் காதலர்; செலினும், |
|
நோன்மார் அல்லர், நோயே; மற்று அவர் |
||
கொன்னும் நம்புங் குரையர் தாமே; |
||
சிறந்த அன்பினர்; சாயலும் உரியர்; |
||
பிரிந்த நம்மினும் இரங்கி, அரும் பொருள் |
||
10 |
முடியாதுஆயினும் வருவர்; அதன்தலை, |
|
இன் துணைப் பிரிந்தோர் நாடித் |
||
தருவது போலும், இப் பெரு மழைக் குரலே? | உரை | |
செலவுற்றாரது குறிப்பு அறிந்து ஆற்றாளாய தலைமகள் உரைப்ப,தோழி சொல்லியது.-நொச்சி நியமங் கிழார்
|
209. குறிஞ்சி |
மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத் |
||
தளி பதம் பெற்ற கான் உழு குறவர் |
||
சில வித்து அகல இட்டென, பல விளைந்து, |
||
இறங்குகுரல் பிறங்கிய ஏனல் உள்ளாள், |
||
5 |
மழலை அம் குறுமகள், மிழலைஅம் தீம் குரல் |
|
கிளியும் தாம் அறிபவ்வே; எனக்கே |
||
படும்கால் பையுள் தீரும்; படாஅது |
||
தவிரும்காலைஆயின், என் |
||
உயிரோடு எல்லாம் உடன் வாங்கும்மே! | உரை | |
குறை மறுக்கப்பட்டுப் பின்னின்ற தலைமகன் ஆற்றானாய், நெஞ்சிற்குச் சொல்லுவானாய்ச் சொல்லியது; தோழி கேட்டுக் குறை முடிப்பது பயன்.-நொச்சி நியமங்கிழார்
|