முகப்பு |
வெள்ளிவீதியார் |
70. மருதம் |
சிறு வெள்ளாங்குருகே! சிறு வெள்ளாங்குருகே! |
||
துறை போகு அறுவைத் தூ மடி அன்ன |
||
நிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே! |
||
எம் ஊர் வந்து, எம் உண்துறைத் துழைஇ, |
||
5 |
சினைக் கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி, |
|
அனைய அன்பினையோ, பெரு மறவியையோ- |
||
ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும் |
||
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என் |
||
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே! | உரை | |
காமம் மிக்க கழிபடர்கிளவி.-வெள்ளி வீதியார்
|
335. நெய்தல் |
திங்களும் திகழ் வான் ஏர்தரும்; இமிழ் நீர்ப் |
||
பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே; |
||
ஒலி சிறந்து ஓதமும் பெயரும்; மலி புனற் |
||
பல் பூங் கானல் முள் இலைத் தாழை |
||
5 |
சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ, |
|
வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு |
||
மை இரும் பனைமிசைப் பைதல உயவும் |
||
அன்றிலும் என்புற நரலும்; அன்றி, |
||
விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ் |
||
10 |
யாமம் உய்யாமை நின்றன்று; |
|
காமம் பெரிதே; களைஞரோ இலரே! | உரை | |
காமம் மிக்க கழிபடர்கிளவி மிதூர்ந்து தலைமகள் சொல்லியது.- வெள்ளிவீதியார்
|
348. நெய்தல் |
நிலவே, நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி, |
||
பால் மலி கடலின், பரந்து பட்டன்றே; |
||
ஊரே, ஒலி வரும் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டி, |
||
கலி கெழு மறுகின், விழவு அயரும்மே; |
||
5 |
கானே, பூ மலர் கஞலிய பொழில் அகம்தோறும் |
|
தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மே; |
||
யானே, புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு |
||
கனை இருங் கங்குலும் கண்படை இலெனே: |
||
அதனால், என்னொடு பொரும்கொல், இவ் உலகம்? |
||
10 |
உலகமொடு பொரும்கொல், என் அவலம் உறு நெஞ்சே? | உரை |
வேட்கை பெருகத் தாங்கலளாய், ஆற்றாமை மீதூர்கின்றாள் சொல்லியது.-வெள்ளி வீதியார்
|