முகப்பு |
கொல்லிப்பாவை |
185. குறிஞ்சி |
ஆனா நோயோடு அழி படர்க் கலங்கி, |
||
காமம் கைம்மிக, கையறு துயரம் |
||
காணவும் நல்காய் ஆயின்-பாணர் |
||
பரிசில் பெற்ற விரி உளை நல் மான் |
||
5 |
கவி குளம்பு பொருத கல் மிசைச் சிறு நெறி, |
|
இரவலர் மெலியாது ஏறும், பொறையன் |
||
உரை சால் உயர் வரைக் கொல்லிக் குடவயின், |
||
அகல் இலைக் காந்தள் அலங்கு குலைப் பாய்ந்து, |
||
பறவை இழைத்த பல் கண் இறாஅல் |
||
10 |
தேனுடை நெடு வரை, தெய்வம் எழுதிய |
|
வினை மாண் பாவை அன்னோள் |
||
கொலை சூழ்ந்தனளால்-நோகோ யானே. |
உரை | |
பாங்கற்குத் தலைவன் சொல்லியது; சேட்படுக்கும் தோழிக்குத் தலைவன் சொல்லியதூஉம் ஆம்.
|
192. குறிஞ்சி |
'குருதி வேட்கை உரு கெழு வய மான் |
||
வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும் |
||
மரம் பயில் சோலை மலிய, பூழியர் |
||
உருவத் துருவின், நாள் மேயல் ஆரும் |
||
5 |
மாரி எண்கின் மலைச் சுர நீள் இடை, |
|
நீ நயந்து வருதல் எவன்?' எனப் பல புலந்து, |
||
அழுதனை உறையும் அம் மா அரிவை! |
||
பயம் கெழு பலவின் கொல்லிக் குட வரைப் |
||
பூதம் புணர்த்த புதிது இயல் பாவை |
||
10 |
விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன, நின் |
|
ஆய் நலம் உள்ளி வரின், எமக்கு |
||
ஏமம் ஆகும், மலைமுதல் ஆறே. |
உரை | |
இரவுக்குறி மறுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது.
|
201.குறிஞ்சி |
'மலை உறை குறவன் காதல் மட மகள், |
||
பெறல் அருங்குரையள், அருங் கடிக் காப்பினள்; |
||
சொல் எதிர் கொள்ளாள்; இளையள்; அனையோள் |
||
உள்ளல் கூடாது' என்றோய்! மற்றும், |
||
5 |
செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லித் |
|
தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங் கோட்டு, |
||
அவ் வெள் அருவிக் குட வரையகத்து, |
||
கால் பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும், |
||
உரும் உடன்று எறியினும், ஊறு பல தோன்றினும், |
||
10 |
பெரு நிலம் கிளரினும், திரு நல உருவின் |
|
மாயா இயற்கைப் பாவையின், |
||
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே. |
உரை | |
கழறிய பாங்கற்குத் தலைமகன் சொல்லியது.-பரணர்
|