முகப்பு |
செழியன் |
39. குறிஞ்சி |
சொல்லின் சொல் எதிர்கொள்ளாய், யாழ நின் |
||
திருமுகம் இறைஞ்சி நாணுதி கதுமென; |
||
காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ? |
||
கொடுங் கேழ் இரும் புறம் நடுங்கக் குத்திப் |
||
5 |
புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின் |
|
தலை மருப்பு ஏய்ப்ப, கடை மணி சிவந்த நின் |
||
கண்ணே கதவ? அல்ல; நண்ணார் |
||
அரண் தலை மதிலராகவும், முரசு கொண்டு, |
||
ஓம்பு அரண் கடந்த அடு போர்ச் செழியன் |
||
10 |
பெரும் பெயர்க் கூடல் அன்ன நின் |
|
கரும்புடைத் தோளும் உடையவால் அணங்கே. |
உரை | |
இரண்டாம் கூட்டத்து எதிர்ச்சியில் தலைவன் சொல்லியது.-மருதன் இளநாகனார்
|
298. பாலை |
வம்ப மாக்கள் வரு திறம் நோக்கி, |
||
செங் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர் |
||
மடி வாய்த் தண்ணுமைத் தழங்கு குரல் கேட்ட |
||
எருவைச் சேவல் கிளைவயிற் பெயரும் |
||
5 |
அருஞ் சுரக் கவலை, அஞ்சுவரு நனந்தலைப் |
|
பெரும் பல் குன்றம் உள்ளியும், மற்று-இவள் |
||
கரும்புடைப் பணைத் தோள் நோக்கியும், ஒரு திறம் |
||
பற்றாய்-வாழி, எம் நெஞ்சே!-நல் தார்ப் |
||
பொற்றேர்ச் செழியன் கூடல் ஆங்கண், |
||
10 |
ஒருமை செப்பிய அருமை, வான் முகை |
|
இரும் போது கமழும் கூந்தல், |
||
பெரு மலை தழீஇயும், நோக்கு இயையுமோமற்றே? |
உரை | |
தோழியால் பொருள் வலிப்பித்துத் தலைமகளை எய்தி ஆற்றாதாய நெஞ்சினை நெருங் கிச் சொல்லி, தலைமகன் செலவு அழுங்கியது.- விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
|
340. மருதம் |
புல்லேன், மகிழ்ந! புலத்தலும் இல்லேன்- |
||
கல்லா யானைக் கடுந் தேர்ச் செழியன் |
||
படை மாண் பெருங் குள மடை நீர் விட்டென, |
||
கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை |
||
5 |
அள்ளல்அம் கழனி உள்வாய் ஓடி, |
|
பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து, |
||
செஞ் சால் உழவர் கோல் புடை மதரி, |
||
பைங் காற் செறுவின் அணைமுதல் பிறழும் |
||
வாணன் சிறுகுடி அன்ன, என் |
||
10 |
கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே! |
உரை |
பரத்தையிற் மறுத்தந்த தலைமகனைத் தலைமகள் நொந்து சொல்லியது.-நக்கீரர்
|
387. பாலை |
நெறி இருங் கதுப்பும், நீண்ட தோளும், |
||
அம்ம! நாளும் தொல் நலம் சிதைய, |
||
ஒல்லாச் செந் தொடை ஒரீஇய கண்ணிக் |
||
கல்லா மழவர் வில்லிடை விலங்கிய |
||
5 |
துன் அருங் கவலை அருஞ் சுரம் இறந்தோர் |
|
வருவர் வாழி-தோழி!-செரு இறந்து |
||
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த |
||
வேல் கெழு தானைச் செழியன் பாசறை |
||
உறை கழி வாளின் மின்னி, உதுக்காண், |
||
10 |
நெடும் பெருங் குன்றம் முற்றி, |
|
கடும் பெயல் பொழியும், கலி கெழு வானே. |
உரை | |
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறீஇயது.- பொதும்பில் கிழார் மகனார்
|