முகப்பு |
சோழர் |
10. பாலை |
அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும், |
||
பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த |
||
நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும், |
||
நீத்தல் ஓம்புமதி-பூக் கேழ் ஊர! |
||
5 |
இன் கடுங் கள்ளின் இழை அணி நெடுந் தேர்க் |
|
கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர், |
||
வெண் கோட்டு யானைப் போஒர் கிழவோன் |
||
பழையன் வேல் வாய்த்தன்ன நின் |
||
பிழையா நல் மொழி தேறிய இவட்கே. |
உரை | |
உடன்போக்கும் தோழி கையடுத்தது.
|
87. நெய்தல் |
உள் ஊர் மா அத்த முள் எயிற்று வாவல் |
||
ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின், |
||
வெல் போர்ச் சோழர் அழிசிஅம் பெருங் காட்டு |
||
நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு, |
||
5 |
அது கழிந்தன்றே-தோழி!-அவர் நாட்டுப் |
|
பனி அரும்பு உடைந்த பெருந் தாட் புன்னை |
||
துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும் |
||
சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும், |
||
பெருந் தண் கானலும், நினைந்த அப் பகலே. |
உரை | |
வரைவிடை வைத்துப்பிரிய ஆற்றாளாய தலைவி கனாக் கண்டு, தோழிக்கு உரைத்தது.-நக்கண்ணையார்
|
281. பாலை |
மாசு இல் மரத்த பலி உண் காக்கை |
||
வளி பொரு நெடுஞ் சினை தளியொடு தூங்கி, |
||
வெல் போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும் |
||
நல் வகை மிகு பலிக் கொடையோடு உகுக்கும் |
||
5 |
அடங்காச் சொன்றி, அம் பல் யாணர் |
|
விடக்குடைப் பெருஞ் சோறு, உள்ளுவன இருப்ப, |
||
மழை அமைந்து உற்ற மால் இருள் நடு நாள், |
||
தாம் நம் உழையராகவும், நாம் நம் |
||
பனிக் கடுமையின், நனி பெரிது அழுங்கி, |
||
10 |
துஞ்சாம் ஆகலும் அறிவோர் |
|
அன்பிலர்-தோழி!-நம் காதலோரே. |
உரை | |
வன்பொறை எதிர் அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது; 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழி தலைமகட்கு உரைத்ததூஉம் ஆம்.- கழார்க் கீரன் எயிற்றியார்
|
379. குறிஞ்சி |
புன் தலை மந்தி கல்லா வன் பறழ் |
||
குன்று உழை நண்ணிய முன்றில் போகாது, |
||
எரி அகைந்தன்ன வீ ததை இணர |
||
வேங்கைஅம் படு சினைப் பொருந்தி, கைய |
||
5 |
தேம் பெய் தீம் பால் வௌவலின், கொடிச்சி |
|
எழுது எழில் சிதைய அழுத கண்ணே, |
||
தேர் வண் சோழர் குடந்தைவாயில் |
||
மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த, |
||
பெயல் உறு நீலம் போன்றன விரலே, |
||
10 |
பாஅய் அவ் வயிறு அலைத்தலின், ஆனாது, |
|
ஆடு மழை தவழும் கோடு உயர் பொதியில் |
||
ஓங்கு இருஞ் சிலம்பில் பூத்த |
||
காந்தள்அம் கொழு முகை போன்றன, சிவந்தே. |
உரை | |
தோழி தலைமகற்குத் தலைமகளை மடமை கூறியது; காப்புக் கைம்மிக்க காலத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம்.-குடவாயிற் கீரத்தனார்
|
400. மருதம் |
வாழை மென் தோடு வார்புஉறுபு ஊக்கும் |
||
நெல் விளை கழனி நேர் கண் செறுவின், |
||
அரிவனர் இட்ட சூட்டு அயல், பெரிய |
||
இருஞ் சுவல் வாளை பிறழும் ஊர! |
||
5 |
நினின்று அமைகுவென்ஆயின், இவண் நின்று, |
|
இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ? |
||
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து, |
||
அறம் கெட அறியாதாங்கு, சிறந்த |
||
கேண்மையொடு அளைஇ, நீயே |
||
10 |
கெடு அறியாய் என் நெஞ்சத்தானே. |
உரை |
பரத்தை தலைவனைப் புகழ்ந்தது. முன்பு நின்று யாதோ புகழ்ந்தவாறு எனின், 'நின் இன்று அமையாம்' என்று சொன்னமையான் என்பது.-ஆலங்குடி வங்கனார்
|