முகப்பு |
ஈந்தமரம் |
2. பாலை |
அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து, |
||
ஒலி வல் ஈந்தின் உலவைஅம் காட்டு, |
||
ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த |
||
செம் மறுத் தலைய, நெய்த்தோர் வாய, |
||
5 |
வல்லியப் பெருந் தலைக் குருளை, மாலை, |
|
மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே; |
||
வை எயிற்று ஐயள் மடந்தைமுன் உற்று |
||
எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம், |
||
காலொடு பட்ட மாரி |
||
10 |
மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே! |
உரை |
உடன் போகாநின்றாரை இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது.-பெரும்பதுமனார்
|
126. பாலை |
பைங் காய் நல் இடம் ஒரீஇய செங்காய்க் |
||
கருங் களி ஈந்தின் வெண் புறக் களரி |
||
இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல் |
||
ஆள் பெறல் நசைஇ, நாள் சுரம் விலங்கி, |
||
5 |
துனைதரும் வம்பலர்க் காணாது, அச் சினம் |
|
பனைக் கான்று ஆறும் பாழ் நாட்டு அத்தம், |
||
இறந்து செய் பொருளும் இன்பம் தரும் எனின், |
||
இளமையின் சிறந்த வளமையும் இல்லை; |
||
இளமை கழிந்த பின்றை, வளமை |
||
10 |
காமம் தருதலும் இன்றே; அதனால், |
|
நில்லாப் பொருட் பிணிச் சேறி; |
||
வல்லே-நெஞ்சம்!-வாய்க்க நின் வினையே! |
உரை | |
பொருள் வலித்த நெஞ்சினைத் தலைவன் நெருங்கிச் செலவு அழுங்கியது.
|
174. பாலை |
'கற்றை ஈந்தின் முற்றுக் குலை அன்ன |
||
ஆள் இல் அத்தத் தாள் அம் போந்தைக் |
||
கோளுடை நெடுஞ் சினை ஆண் குரல் விளிப்பின், |
||
புலி எதிர் வழங்கும் வளி வழங்கு ஆர் இடைச் |
||
5 |
சென்ற காதலர் வந்து, இனிது முயங்கி, |
|
பிரியாது ஒரு வழி உறையினும், பெரிது அழிந்து |
||
உயங்கினை, மடந்தை!' என்றி-தோழி!- |
||
அற்றும் ஆகும், அஃது அறியாதோர்க்கே; |
||
வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி |
||
10 |
மல்லல் மார்பு மடுத்தனன் |
|
புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையே? |
உரை | |
வினை முற்றி வந்து எய்திய காலத்து, ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறீஇ நின்றாட்கு அவள் சொல்லியது.
|