முகப்பு |
கள்ளி (நுகும்பு) |
92. பாலை |
உள்ளார்கொல்லோ-தோழி!-துணையொடு |
||
வேனில் ஓதி பாடு நடை வழலை |
||
வரி மரல் நுகும்பின் வாடி, அவண |
||
வறன் பொருந்து குன்றத்து உச்சி கவாஅன் |
||
5 |
வேட்டச் சீறூர் அகன் கண் கேணிப் |
|
பய நிரைக்கு எடுத்த மணி நீர்ப் பத்தர், |
||
புன் தலை மடப் பிடி கன்றோடு ஆர, |
||
வில் கடிந்து ஊட்டின பெயரும் |
||
கொல் களிற்று ஒருத்தல் சுரன் இறந்தோரே! | உரை | |
பிரிவிடை வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது.
|
169. முல்லை |
'முன்னியது முடித்தனம் ஆயின், நன்னுதல்! |
||
வருவம்' என்னும் பருவரல் தீர, |
||
படும்கொல், வாழி, நெடுஞ் சுவர்ப் பல்லி- |
||
பரற் தலை போகிய சிரற் தலைக் கள்ளி |
||
5 |
மீமிசைக் கலித்த வீ நறு முல்லை |
|
ஆடு தலைத் துருவின் தோடு தலைப்பெயர்க்கும் |
||
வன் கை இடையன் எல்லிப் பரீஇ, |
||
வெண் போழ் தைஇய அலங்கல்அம் தொடலை |
||
மறுகுடன் கமழும் மாலை, |
||
10 |
சிறுகுடிப் பாக்கத்து எம் பெரு நகரானே. | உரை |
வினை முற்றி மறுத்தராநின்றான் நெஞ்சிற்கு உரைத்தது.
|
314. பாலை |
'முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார்; |
||
வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை; |
||
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் அலரி |
||
நறுங் காழ் ஆரமொடு மிடைந்த மார்பில், |
||
5 |
குறும் பொறிக் கொண்ட கொம்மை அம் புகர்ப்பின் |
|
கருங் கண் வெம் முலை ஞெமுங்கப் புல்லிக் |
||
கழிவதாக, கங்குல்' என்று |
||
தாம் மொழி வன்மையின் பொய்த்தனர், வாழிய- |
||
நொடி விடுவன்ன காய் விடு கள்ளி |
||
10 |
அலங்கல்அம் பாவை ஏறி, புலம்பு கொள் |
|
புன் புறா வீழ் பெடைப் பயிரும் |
||
என்றூழ் நீளிடைச் சென்றிசினோரே! | உரை | |
பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது.- முப்பேர் நாகனார்
|
384. பாலை |
பைம் புறப் புறவின் செங் காற் சேவல் |
||
களரி ஓங்கிய கவை முடக் கள்ளி |
||
முளரி அம் குடம்பை ஈன்று, இளைப்பட்ட |
||
உயவு நடைப் பேடை உணீஇய, மன்னர் |
||
5 |
முனை கவர் முது பாழ் உகு நெற் பெறூஉம் |
|
அரண் இல் சேய் நாட்டு அதர் இடை, மலர்ந்த |
||
நல் நாள் வேங்கைப் பொன் மருள் புதுப் பூப் |
||
பரந்தன நடக்க, யாம் கண்டனம் மாதோ: |
||
காண் இனி வாழி-என் நெஞ்சே!-நாண் விட்டு |
||
10 |
அருந் துயர் உழந்த காலை |
|
மருந்து எனப்படூஉம் மடவோளையே. | உரை | |
உடன் போகாநின்றான் மலிந்து தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
|