முகப்பு |
அதிரல் |
52. பாலை |
மாக் கொடி அதிரற் பூவொடு பாதிரித் |
||
தூத் தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல் |
||
மணம் கமழ் நாற்றம் மரீஇ, யாம் இவள் |
||
சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி, |
||
5 |
வீங்கு உவர்க் கவவின் நீங்கல்செல்லேம்; |
|
நீயே, ஆள்வினை சிறப்ப எண்ணி, நாளும் |
||
பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே; |
||
அன்பு இலை; வாழி, என் நெஞ்சே! வெம் போர் |
||
மழவர் பெரு மகன் மா வள் ஓரி |
||
10 |
கை வளம் இயைவது ஆயினும், |
|
ஐது ஏகு அம்ம, இயைந்து செய் பொருளே. | உரை | |
தலைமகன் செலவு அழுங்கியது.-பாலத்தனார்
|
124. நெய்தல் |
ஒன்று இல் காலை அன்றில் போலப் |
||
புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை |
||
யானும் ஆற்றேன்; அதுதானும் வந்தன்று- |
||
நீங்கல்; வாழியர்; ஐய!-ஈங்கை |
||
5 |
முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர், |
|
நவ்வி நோன் குளம்பு அழுந்தென, வெள்ளி |
||
உருக்குறு கொள்கலம் கடுப்ப, விருப்புறத் |
||
தெண் நீர்க் குமிழி இழிதரும் |
||
தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே. | உரை | |
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைவற்கு உரைத்தது.-மோசி கண்ணத்தனார்
|
337. பாலை |
உலகம் படைத்த காலை-தலைவ!- |
||
மறந்தனர்கொல்லோ சிறந்திசினோரே- |
||
முதிரா வேனில் எதிரிய அதிரல், |
||
பராரைப் பாதிரிக் குறு மயிர் மா மலர், |
||
5 |
நறு மோரோடமொடு, உடன் எறிந்து அடைச்சிய |
|
செப்பு இடந்தன்ன நாற்றம் தொக்கு உடன், |
||
அணி நிறம் கொண்ட மணி மருள் ஐம் பால் |
||
தாழ் நறுங் கதுப்பில் பையென முள்கும் |
||
அரும் பெறல் பெரும் பயம் கொள்ளாது, |
||
10 |
பிரிந்து உறை மரபின பொருள் படைத்தோரே. | உரை |
தோழி, தலைமகன் பொருள்வயிற் பிரிதலுற்றானது குறிப்பறிந்து விலக்கியது; தோழி உலகியல் கூறிப் பிரிவு உணர்த்தியதூஉம் ஆம்.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
|