முகப்பு |
ஈங்கை |
79. பாலை |
'சிறை நாள் ஈங்கை உறை நனி திரள்வீ, |
||
கூரை நல் மனைக் குறுந் தொடி மகளிர் |
||
மணல் ஆடு கழங்கின், அறை மிசைத் தாஅம் |
||
ஏர் தரலுற்ற இயக்கு அருங் கவலைப் |
||
5 |
பிரிந்தோர் வந்து, நப்புணரப் புணர்ந்தோர் |
|
பிரிதல் சூழ்தலின், அரியதும் உண்டோ?' |
||
என்று நாம் கூறிக் காமம் செப்புதும்; |
||
செப்பாது விடினே, உயிரொடும் வந்தன்று- |
||
அம்ம! வாழி, தோழி!- |
||
10 |
யாதனின் தவிர்க்குவம், காதலர் செலவே? | உரை |
பிரிவு உணர்ந்து வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது.-கண்ணகனார்
|
124. நெய்தல் |
ஒன்று இல் காலை அன்றில் போலப் |
||
புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை |
||
யானும் ஆற்றேன்; அதுதானும் வந்தன்று- |
||
நீங்கல்; வாழியர்; ஐய!-ஈங்கை |
||
5 |
முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர், |
|
நவ்வி நோன் குளம்பு அழுந்தென, வெள்ளி |
||
உருக்குறு கொள்கலம் கடுப்ப, விருப்புறத் |
||
தெண் நீர்க் குமிழி இழிதரும் |
||
தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே. | உரை | |
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைவற்கு உரைத்தது.-மோசி கண்ணத்தனார்
|
181. முல்லை |
உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல் |
||
பிற புலத் துணையோடு உறை புலத்து அல்கி, |
||
வந்ததன் செவ்வி நோக்கி, பேடை |
||
நெறி கிளர் ஈங்கைப் பூவின் அன்ன |
||
5 |
சிறு பல் பிள்ளையொடு குடம்பை கடிதலின், |
|
துவலையின் நனைந்த புறத்தது அயலது |
||
கூரல் இருக்கை அருளி, நெடிது நினைந்து, |
||
ஈர நெஞ்சின் தன் வயின் விளிப்ப, |
||
கையற வந்த மையல் மாலை |
||
10 |
இரீஇய ஆகலின், இன் ஒலி இழந்த |
|
தார் அணி புரவி தண் பயிர் துமிப்ப |
||
வந்தன்று, பெருவிறல் தேரே; |
||
உய்ந்தன்றாகும், இவள் ஆய் நுதற் கவினே. | உரை | |
வினை முற்றிப் புகுந்தது கண்ட தோழி மகிழ்ந்து உரைத்தது.
|
193. பாலை |
அட்டரக்கு உருவின் வட்டு முகை ஈங்கைத் |
||
துய்த் தலைப் புது மலர்த் துளி தலைக் கலாவ, |
||
நிறை நீர்ப் புனிற்றுப் புலம் துழைஇ, ஆனாய், |
||
இரும் புறம் தழூஉம் பெருந் தண் வாடை! |
||
5 |
நினக்குத் தீது அறிந்தன்றோ இலமே; |
|
பணைத் தோள் எல் வளை ஞெகிழ்த்த எம் காதலர் |
||
அருஞ் செயல் பொருட் பிணிப் பிரிந்தனராக, |
||
யாரும் இல் ஒரு சிறை இருந்து, |
||
பேர் அஞர் உறுவியை வருத்தாதீமே! | உரை | |
பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் சொல்லியது.
|