முகப்பு |
கரடி (எண்கு) |
125.குறிஞ்சி |
'இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றை |
||
கொடு வரிப் புற்றம் வாய்ப்ப வாங்கி, |
||
நல் அரா நடுங்க உரறி, கொல்லன் |
||
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, அகழும் |
||
5 |
நடு நாள் வருதல் அஞ்சுதும் யாம்' என, |
|
வரைந்து வரல் இரக்குவம் ஆயின், நம் மலை |
||
நல் நாள் வதுவை கூடி, நீடு இன்று |
||
நம்மொடு செல்வர்மன்-தோழி!-மெல்ல |
||
வேங்கைக் கண்ணியர் எருது எறி களமர் |
||
10 |
நிலம் கண்டன்ன அகன் கண் பாசறை, |
|
மென் தினை நெடும் போர் புரிமார் |
||
துஞ்சு களிறு எடுப்பும் தம் பெருங் கல் நாட்டே. | உரை | |
வரைவு நீட்டிப்ப, ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.
|
192. குறிஞ்சி |
'குருதி வேட்கை உரு கெழு வய மான் |
||
வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும் |
||
மரம் பயில் சோலை மலிய, பூழியர் |
||
உருவத் துருவின், நாள் மேயல் ஆரும் |
||
5 |
மாரி எண்கின் மலைச் சுர நீள் இடை, |
|
நீ நயந்து வருதல் எவன்?' எனப் பல புலந்து, |
||
அழுதனை உறையும் அம் மா அரிவை! |
||
பயம் கெழு பலவின் கொல்லிக் குட வரைப் |
||
பூதம் புணர்த்த புதிது இயல் பாவை |
||
10 |
விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன, நின் |
|
ஆய் நலம் உள்ளி வரின், எமக்கு |
||
ஏமம் ஆகும், மலைமுதல் ஆறே. | உரை | |
இரவுக்குறி மறுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது.
|
325. பாலை |
கவிதலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை |
||
இரை தேர் வேட்கையின் இரவில் போகி, |
||
நீடு செயல் சிதலைத் தோடு புனைந்து எடுத்த |
||
அர வாழ் புற்றம் ஒழிய, ஒய்யென |
||
5 |
முர வாய் வள் உகிர் இடப்ப வாங்கும், |
|
ஊக்கு அருங் கவலை நீந்தி, மற்று-இவள் |
||
பூப்போல் உண்கண் புது நலம் சிதைய, |
||
வீங்கு நீர் வாரக் கண்டும், |
||
தகுமோ?-பெரும!-தவிர்க நும் செலவே. | உரை | |
தோழி செலவு அழுங்குவித்தது.-மதுரைக் காருலவியங் கூத்தனார்
|
336. குறிஞ்சி |
பிணர்ச் சுவற் பன்றி தோல்முலைப் பிணவொடு |
||
கணைக் கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின், |
||
கல் அதர் அரும் புழை அல்கி, கானவன், |
||
வில்லின் தந்த வெண் கோட்டு ஏற்றை, |
||
5 |
புனை இருங் கதுப்பின் மனையோள் கெண்டி, |
|
குடி முறை பகுக்கும் நெடு மலை நாட! |
||
உரவுச் சின வேழம் உறு புலி பார்க்கும் |
||
இரவின் அஞ்சாய்; அஞ்சுவல்-அரவின் |
||
ஈர் அளைப் புற்றம், கார் என முற்றி, |
||
10 |
இரை தேர் எண்கினம் அகழும் |
|
வரை சேர் சிறு நெறி வாராதீமே! | உரை | |
ஆறு பார்த்துற்றுச்சொல்லியது.-கபிலர்
|