முகப்பு |
கூகை |
83. குறிஞ்சி |
எம் ஊர் வாயில் உண்துறைத் தடைஇய |
||
கடவுள் முது மரத்து, உடன் உறை பழகிய, |
||
தேயா வளை வாய், தெண் கண், கூர் உகிர், |
||
வாய்ப் பறை அசாஅம், வலி முந்து கூகை! |
||
5 |
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல், |
|
எலி வான் சூட்டொடு, மலியப் பேணுதும்; |
||
எஞ்சாக் கொள்கை எம் காதலர் வரல் நசைஇத் |
||
துஞ்சாது அலமரு பொழுதின், |
||
அஞ்சு வரக் கடுங் குரல் பயிற்றாதீமே. | உரை | |
இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லியது.-பெருந்தேவனார்
|
218. நெய்தல் |
ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றே; |
||
எல்லியும், பூ வீ கொடியின் புலம்பு அடைந்தன்றே; |
||
வாவலும் வயின்தொறும் பறக்கும்; சேவலும் |
||
நகை வாய்க் கொளீஇ நகுதொறும் விளிக்கும்; |
||
5 |
ஆயாக் காதலொடு அதர்ப் படத் தெளித்தோர் |
|
கூறிய பருவம் கழிந்தன்று; பாரிய |
||
பராரை வேம்பின் படு சினை இருந்த |
||
குராஅற் கூகையும் இராஅ இசைக்கும்; |
||
ஆனா நோய் அட வருந்தி, இன்னும் |
||
10 |
தமியேன் கேட்குவென் கொல்லோ, |
|
பரியரைப் பெண்ணை அன்றிற் குரலே? | உரை | |
வரைவிடை மெலிந்த தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது.கிடங்கில் - காவிதிக் கீரங்கண்ணனார்
|
319. நெய்தல் |
ஓதமும் ஒலி ஓவின்றே; ஊதையும் |
||
தாது உளர் கானல் தவ்வென்றன்றே; |
||
மணல் மலி மூதூர் அகல் நெடுந் தெருவில், |
||
கூகைச் சேவல் குராலோடு ஏறி, |
||
5 |
ஆர் இருஞ் சதுக்கத்து அஞ்சுவரக் குழறும், |
|
அணங்கு கால் கிளரும், மயங்கு இருள் நடு நாள்; |
||
பாவை அன்ன பலர் ஆய் வனப்பின், |
||
தட மென் பணைத் தோள், மடம் மிகு குறுமகள் |
||
சுணங்கு அணி வன முலை முயங்கல் உள்ளி, |
||
10 |
மீன் கண் துஞ்சும் பொழுதும், |
|
யான் கண் துஞ்சேன்; யாதுகொல் நிலையே? | உரை | |
காப்பு மிகுதிக்கண் ஆற்றானாகிய தலைமகன், தலைமகளை நினைந்து தன்னுள்ளே சொல்லி யது.- வினைத்தொழில் சோகீரனார்
|