முகப்பு |
பருந்து (எருவை) |
3. பாலை |
ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ் சினைப் |
||
பொரி அரை வேம்பின் புள்ளி நீழல், |
||
கட்டளை அன்ன வட்டு அரங்கு இழைத்து, |
||
கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும் |
||
5 |
வில் ஏர் உழவர் வெம் முனைச் சீறூர்ச் |
|
சுரன்முதல் வந்த உரன் மாய் மாலை |
||
உள்ளினென் அல்லெனோ, யானே-உள்ளிய |
||
வினை முடித்தன்ன இனியோள் |
||
மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே? | உரை | |
முன் ஒரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக் கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.-இளங்கீரனார்
|
141. பாலை |
இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள், கய வாய், |
||
மாரி யானையின் மருங்குல் தீண்டி, |
||
பொரி அரை ஞெமிர்ந்த புழற் காய்க் கொன்றை, |
||
நீடிய சடையோடு ஆடா மேனிக் |
||
5 |
குன்று உறை தவசியர் போல, பல உடன் |
|
என்றூழ் நீள் இடைப் பொற்பத் தோன்றும் |
||
அருஞ் சுரம் எளியமன், நினக்கே; பருந்து பட, |
||
பாண்டிலொடு பொருத பல் பிணர்த் தடக் கை |
||
ஏந்து கோட்டு யானை இசை வெங் கிள்ளி |
||
10 |
வம்பு அணி உயர் கொடி அம்பர் சூழ்ந்த |
|
அரிசில் அம் தண் அறல் அன்ன, இவள் |
||
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே. | உரை | |
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைவன் சொல்லிச் செலவு அழுங்கியது.-சல்லியங்குமரனார்
|
298. பாலை |
வம்ப மாக்கள் வரு திறம் நோக்கி, |
||
செங் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர் |
||
மடி வாய்த் தண்ணுமைத் தழங்கு குரல் கேட்ட |
||
எருவைச் சேவல் கிளைவயிற் பெயரும் |
||
5 |
அருஞ் சுரக் கவலை, அஞ்சுவரு நனந்தலைப் |
|
பெரும் பல் குன்றம் உள்ளியும், மற்று-இவள் |
||
கரும்புடைப் பணைத் தோள் நோக்கியும், ஒரு திறம் |
||
பற்றாய்-வாழி, எம் நெஞ்சே!-நல் தார்ப் |
||
பொற்றேர்ச் செழியன் கூடல் ஆங்கண், |
||
10 |
ஒருமை செப்பிய அருமை, வான் முகை |
|
இரும் போது கமழும் கூந்தல், |
||
பெரு மலை தழீஇயும், நோக்கு இயையுமோமற்றே? | உரை | |
தோழியால் பொருள் வலிப்பித்துத் தலைமகளை எய்தி ஆற்றாதாய நெஞ்சினை நெருங் கிச் சொல்லி, தலைமகன் செலவு அழுங்கியது.- விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
|