முகப்பு |
கழார்க்கீரன் எயிற்றி |
35. மருதம் |
நாண் இல மன்ற, எம் கண்ணே-நாள் நேர்பு, |
||
சினைப் பசும்பாம்பின் சூல் முதிர்ப்பன்ன |
||
கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ |
||
நுண் உறை அழிதுளி தலைஇய |
||
தண் வரல் வாடையும், பிரிந்திசினோர்க்கு அழலே. |
உரை | |
பிரிவிடை மெலிந்த கிழத்தி தோழிக்குச் சொல்லியது. - கழார்க் கீரன் எயிற்றி |
261. குறிஞ்சி |
பழ மழை பொழிந்தெனப் பதன் அழிந்து உருகிய |
||
சிதட்டுக் காய் எண்ணின் சில் பெயற் கடை நாள், |
||
சேற்று நிலை முனைஇய செங் கட் காரான், |
||
நள்ளென் யாமத்து, 'ஐ' எனக் கரையும் |
||
அஞ்சுவரு பொழுதினானும், என் கண் |
||
துஞ்சா வாழி-தோழி!-காவலர் |
||
கணக்கு ஆய் வகையின் வருந்தி, என் |
||
நெஞ்சு புண் உற்ற விழுமத்தானே. |
உரை | |
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - கழார்க் கீரன் எயிற்றி |
330. மருதம் |
நலத்தகைப் புலைத்தி பசை தோய்த்து எடுத்துத் |
||
தலைப் புடைப் போக்கித் தண் கயத்து இட்ட |
||
நீரின் பிரியாப் பரூஉத் திரி கடுக்கும் |
||
பேர் இலைப் பகன்றைப் பொதி அவிழ் வான் பூ |
||
இன் கடுங் கள்ளின் மணம் இல கமழும் |
||
புன்கண் மாலையும், புலம்பும், |
||
இன்றுகொல்-தோழி!-அவர் சென்ற நாட்டே? |
உரை | |
பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது. - கழார்க் கீரன் எயிற்றியன் |