முகப்பு |
கூடலூர் கிழார் |
166. நெய்தல் |
தண் கடற் படு திரை பெயர்த்தலின், வெண் பறை |
||
நாரை நிரை பெயர்ந்து அயிரை ஆரும், |
||
ஊரோ நன்றுமன், மரந்தை; |
||
ஒரு தனி வைகின், புலம்பு ஆகின்றே. |
உரை | |
காப்பு மிகுதிக்கண் தோழி தலைமகட்கு உரைத்தது. - கூடலூர் கிழார் |
167. முல்லை |
முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல், |
||
கழுவுறு கலிங்கம், கழாஅது, உடீஇ, |
||
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத் |
||
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர் |
||
'இனிது' எனக் கணவன் உண்டலின், |
||
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே. |
உரை | |
கடிநகர் சென்ற செவிலித்தாய், நற்றாய்க்கு உரைத்தது. - கூடலூர் கிழார் |
214. குறிஞ்சி |
மரம் கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய |
||
பிறங்கு குரல் இறடி காக்கும், புறம் தாழ் |
||
அம் சில் ஓதி, அசை இயல், கொடிச்சி |
||
திருந்து இழை அல்குற்குப் பெருந் தழை உதவிச் |
||
செயலை முழுமுதல் ஒழிய, அயலது |
||
அரலை மாலை சூட்டி, |
||
ஏமுற்றன்று-இவ் அழுங்கல் ஊரே. |
உரை | |
தோழி, வெறியாட்டு எடுத்துக் கொண்ட இடத்து, அறத்தொடு நின்றது. - கூடலூர் கிழார் |