முகப்பு |
பேயனார் |
233. முல்லை |
கவலை கெண்டிய கல்வாய்ச் சிறு குழி |
||
கொன்றை ஒள் வீ தாஅய், செல்வர் |
||
பொன் பெய் பேழை மூய் திறந்தன்ன |
||
கார் எதிர் புறவினதுவே-உயர்ந்தோர்க்கு |
||
நீரொடு சொரிந்த மிச்சில், யாவர்க்கும் |
||
வரைகோள் அறியாச் சொன்றி, |
||
நிரை கோற் குறுந்தொடி தந்தை ஊரே. |
உரை | |
பட்ட பின்றை வரையாது சென்று, வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - பேயன் |
359. மருதம் |
கண்டிசின்-பாண!-பண்பு உடைத்து அம்ம: |
||
மாலை விரிந்த பசு வெண் நிலவின் |
||
குறுங் காற் கட்டில் நறும் பூஞ் சேக்கை, |
||
பள்ளி யானையின் உயிர்த்தனன் நசைஇ, |
||
புதல்வற் தழீஇயினன் விறலவன்; |
||
புதல்வன் தாய் அவன் புறம் கவைஇயினளே. |
உரை | |
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன் வாயில் வேண்டிப் பெறாது, தானே புக்குக் கூடியது கண்டு தோழி, பாணற்குச் சொல்லியது. - பேயன். |
400. முல்லை |
'சேயாறு செல்வாம் ஆயின், இடர் இன்று, |
||
களைகலம் காமம், பெருந்தோட்கு' என்று, |
||
நன்று புரிந்து எண்ணிய மனத்தை ஆகி, |
||
முரம்பு கண் உடைய ஏகி, கரம்பைப் |
||
புது வழிப் படுத்த மதியுடை வலவோய்! |
||
இன்று தந்தனை தேரோ- |
||
நோய் உழந்து உறைவியை நல்கலானே? |
உரை | |
வினை முற்றி வந்த தலைமகன் தேர்ப்பாகனைத் தலையளித்தது. - பேயனார் |