முகப்பு |
பேரி சாத்தனார் |
278. பாலை |
உறு வளி உளரிய அம் தளிர் மாஅத்து |
||
முறி கண்டன்ன மெல்லென் சீறடிச் |
||
சிறு பசும் பாவையும், எம்மும், உள்ளார் |
||
கொடியர் வாழி-தோழி!-கடுவன் |
||
ஊழுறு தீம் கனி உதிர்ப்ப, கீழ் இருந்து, |
||
ஏர்ப்பனஏர்ப்பன உண்ணும் |
||
பார்ப்புடை மந்திய மலை இறந்தோரே. |
உரை | |
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் உரைத்தது. - பேரிசாத்தன் |
314. முல்லை |
சேயுயர் விசும்பின் நீர் உறு கமஞ்சூல் |
||
தண்குரல் எழிலி ஒண் சுடர் இமைப்ப, |
||
பெயல் தாழ்பு இருளிய புலம்பு கொள் மாலையும், |
||
வாரார் வாழி!-தோழி!-வரூஉம் |
||
இன் உறல் இள முலை ஞெமுங்க- |
||
இன்னா வைப்பின் சுரன் இறந்தோரே. |
உரை | |
பிரிவிடை வேறுபட்ட கிழத்தி, வற்புறுத்துந் தோழிக்குப் பருவங் காட்டி, அழிந்து கூறியது. - பேரிசாத்தன் |
366. குறிஞ்சி |
பால் வரைந்து அமைத்தல் அல்லது, அவர்வயின் |
||
சால்பு அளந்து அறிதற்கு யாஅம் யாரோ?- |
||
வேறு யான் கூறவும் அமையாள், அதன் தலைப் |
||
பைங் கண் மாச் சுனைப் பல் பிணி அவிழ்ந்த |
||
வள் இதழ் நீலம் நோக்கி, உள் அகைபு, |
||
ஒழுகு கண்ணள் ஆகி, |
||
பழுது அன்று அம்ம, இவ் ஆயிழை துணிவே. |
உரை | |
காவல் மிகுதிக்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு, இவ் வேறுபாடு எற்றினான் ஆயது?' என்று செவிலி வினாவ, தோழி கூறியது. - பேரிசாத்தன் |