- 26 -

சாதகமாகும். ‘தத்த்வார்த்த ஸ்ரத்தானம் சம்யக்தர்சனம££(தத்த்-சூ,) என்பது காண்க. இத்தகைய உண்மைத்தன்மைகளை உணரும் அறிவிலராதலின், ‘தத்துவங் கொண்ட கேள்வியுங் கூரறிவுமிலாத் தொண்டர’ என்றார். துருத்தேவதை - துர்த்தேவதா என்ற வடசொற்சிதைவு.

அரசன் மாரிதேவதையை வணங்குதல்

19. பாவ மூர்த்தி படிவ மிருந்தவத்
  தேவி மாட மடைந்து செறிகழன்
  மாவ லோன்வலங் கொண்டு வணங்கினன்
  தேவி யெம்மிடர் சிந்துக வென்றரோ.

(இ-ள்,) கழல் செறி-வீரக்கழலை யணிந்த,  மா வலோன் -மிக்கவலியோனாகிய மாரிதத்தன்,  பாவ மூர்த்தி-பாவமே உருவெடுத்தாற்போன்ற சண்டமாரிதேவியின், படிவம் இருந்த - சிலைவைத்திருந்த, அ தேவிமாடம் அடைந்து - அவள்கோயிலை யடைந்து, வலம் கொண்டு-வலமாகச்சுற்றிவந்து, தேவி-தேவியே, எம் இடர் சிந்துக-எம்முடைய இடர்களைக் களைவாயாக, என்று-என்றுவேண்டி, வணங்கினன்-தொழுதான். (எ-று,)

பாவ வடிவினளாகிய தேவியை மாரிதத்தன் வணங்கின னென்க.

 ‘அத்தேவி’என்பது, அவள் என்னுஞ் சுட்டின் அளவில் நின்றது.  ஈற்றிலுள்ளதேவி, அண்மைவிளி. மாவலோன்என்பதற்கு, குதிரை அல்லது யானையைச் செலுத்துவதில் வல்லவன் எனினுமாம். கழல்-வீரர் காலில் அணியும் ஒருவித ஆபரணம் சிந்துக, வியங்கோள்,  அரோ, அசை.

20. மன்ன னாணையின் மாமயில் வாரணம்
  துன்னு சூகர மாடெரு மைத்தொகை
  இன்ன சாதி விலங்கி லிரட்டைகள்
  பின்னி வந்து பிறங்கின கண்டனன்.